Skip to main content

வணிக நிறுவனத்திற்கு பெண்களை பயன்படுத்தக்கூடாது.. - தமமு மகளிர் மாநாடு கோரிக்கை

Published on 10/03/2020 | Edited on 10/03/2020

ஜான் பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில மகளிர்  மாநாடு ஈரோட்டில் நேற்று  முன்தினம் பிற்பகல் நடைபெற்றது

த.ம.மு.கட்சியின் பொதுச்செயலாளர் பிரிசில்லா பாண்டியன் இந்த மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார். அக்கட்சியின் நிறுவனரும், தலைவருமான .ஜான்பாண்டியன் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

 

 Women should not be used for business purposes

 

"நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 50சதவீத இட ஒதுக்கீடு வழங்க தனியாக சட்டம் கொண்டு வர வேண்டும். குடும்பப் பெண்களை விதவைகளாக்கும் அரசு டாஸ்மாக் கடைகளை தடை செய்ய வேண்டும் இல்லையேல் டாஸ்மாக் கடைகள் வேண்டாம் என தீர்மானிக்கும் முழு அதிகாரத்தை கிராம சபைக்கு மட்டும் தர வேண்டும். அமைப்பு சாரா தொழிலாளர்களாக வீட்டு வேலைகளில் ஈடுபட்டு வரும் பெண் தொழிலாளர்களுக்கு வேலை நேரம், குறைந்தபட்ச ஊதியம், விடுமுறை குறித்து அரசு கொள்கை வகுத்து நடைமுறைப்படுத்த வேண்டும். 

கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். பெண்களை பாதுகாக்க கொண்டு வந்த காவலன் செயலி குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நுண்கடன் திட்டம் மூலம் கடன் சுமையில் சிக்கி தவிக்கும் சுய உதவிக்குழு பெண்களை கடன் சுமையில் இருந்து மீட்டு பாதுகாக்க வேண்டும். பெண்களை சமமாக பாவிக்கும் மனப்பாங்கை உருவாக்க பாலின சமத்துவக்கல்வியை பள்ளிகளில் கற்றுக்கொடுக்க வேண்டும். 

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாலியல் வழக்குகள் நீதிமன்றங்களில் அதிகளவில் நிலுவையில் உள்ளது. இதனை ஆந்திர அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை போன்று விரைவான சட்ட நடவடிக்கை தமிழகத்திலும் எடுக்க வேண்டும். கேளிக்கை மற்றும் விளம்பர பொருளாக பெண்களை வணிக நிறுவனங்கள் விளம்பரத்திற்கு பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும். வங்கிக் கடன் வழங்குவதில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்" என பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு துரை வைகோ அஞ்சலி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Durai Vaiko Tribute to GaneshaMurthy 

ம.தி.மு.க.வின் பொருளாளராக இருந்த கணேசமூர்த்தி ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்.பி.யாக பணியாற்றி வந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் ம.தி.மு.க.வுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி இன்று (28.03.2024) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்ததுடன் நேரில் சென்று உடலுக்கு அஞ்சலியும் செலுத்தினர்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறைக்கு இன்று மாலை நேரில் சென்று மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தியின் உடலுக்கு மாலை அணிவித்து ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ இறுதி அஞ்சலி செலுத்தினார். அதே சமயம் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் அஞ்சலி செலுத்தினார். அனைத்துக் கட்சி முன்னணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் துரை வைகோ இரங்கல் உரை ஆற்றினார்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்த இரங்கல் கூட்டத்தில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், அ.தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி, திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி எனப் பலரும் கலந்து கொண்டனர். 

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.