Skip to main content

பெண் அரசு ஊழியரை மிரட்டிய நபரை கைது செய்த மகளிர் போலீஸ்...!

Published on 20/10/2020 | Edited on 20/10/2020

 

Women police arrest man who threatened female government servant ...!


கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 43 வயது பெண்மணி, வருவாய்த் துறையில் கிராம நிர்வாக அலுவலராகப் பணி செய்து வருகிறார். இவருக்குத் திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் திருமண தகவல் இணையதளத்தில் தமக்கு 'மணமகன் தேவை' என்று அந்த அரசு பெண் ஊழியர் விளம்பரம் கொடுத்துள்ளார். 


இந்த விளம்பரத்தைப் பார்த்த விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகில் உள்ள அணையேரி உல்லாசம் நகரைச் சேர்ந்த 44 வயது ஜோசப் ஸ்டாலின் என்பவர், அந்தப் பெண் ஊழியரை தொடர்பு கொண்டு பேசிவிட்டு, அவரைத் தேடி கடலூர் சென்றுள்ளார். அங்கு அந்தப் பெண்ணிடம் தான் பள்ளி கல்லூரிகளில் மாணவ மாணவிகளின் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்பு நடத்தி வருவதாகக் கூறி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதோடு அந்தப் பெண்ணிடம் அடிக்கடி செல்ஃபோனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். 


வெளியிடங்களுக்கு இருவரும் சென்று வந்துள்ளனர். இருவரும் இணைந்து புகைப்படங்களும் எடுத்துள்ளனர். இந்த நிலையில் பெண் வீட்டார் தரப்பில் ஜோசப் ஸ்டாலினை தொடர்புகொண்டு விவரங்கள் கேட்டுள்ளனர். அவர்களுக்கு அவர் எந்த விவரமும் தரவில்லை. இந்த நிலையில் அந்தப் பெண்ணிடம் பேசிய ஜோசப் ஸ்டாலின், என்னைத் திருமணம் செய்யாமல் போனால் என்னிடம் உள்ள (நாம் இருவரும் சேர்ந்து எடுத்த) ஃபோட்டோக்களை இணையதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார். 


கடந்த 5ஆம் தேதி செஞ்சி அருகில் உள்ள மட்டபாறை கிராமத்தில் உள்ள ஜோசப் ஸ்டாலின் உறவுப் பெண்ணான ஜெசிந்தாள் என்பவரது வீட்டுக்கு வருமாறு மிரட்டி அந்தப் பெண் அரசு ஊழியரை வரவழைத்துள்ளார். அங்கு இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர். அதை வீடியோவாக எடுத்துள்ளார். ஜோசப் ஸ்டாலின், இதன் பிறகு திருமணத்திற்காக, 40 ஆயிரம் பணம் இரண்டரை சவரன் நகைகளை அந்தப் பெண்ணிடமிருந்து வாங்கியுள்ளார். 


இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்களை அந்தப் பெண் அரசு ஊழியரின் சகோதரிக்கு அனுப்பி உள்ளார், ஜோசப் ஸ்டாலின். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண்ணின் குடும்பத்தினர், ஜோசப் ஸ்டாலின் குறித்து தீவிரமாக விசாரித்துள்ளனர். அதில், ஜோசப் ஸ்டாலின் ஏற்கனவே திருமணமானவர். பெண் அரசு ஊழியரை பொய் சொல்லி ஏமாற்றி உள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனால் அரசு ஊழியர் குடும்பத்தினர் திருமணத்திற்குச் சம்மதிக்கவில்லை இதனால் கோபம் அடைந்த ஜோசப் ஸ்டாலின் அந்தப் பெண் அரசு ஊழியரிடம் உனது ஆபாசப் படங்களையும் வீடியோவையும் இணையதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். 


இதையடுத்து, பாதிக்கப்பட்ட அந்தப் பெண் அரசு ஊழியர், செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் ஜோசப் ஸ்டாலின் அவருக்கு உடந்தையாகச் செயல்பட்ட மட்டப்பாறை ஜெசிந்தாள் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து, ஜோசப் ஸ்டாலினை கைது செய்துள்ளனர் அனைத்து மகளிர் போலீசார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.