ADVERTISEMENT

எங்க ஊருக்கு டாஸ்மாக் வேண்டாம், மாவட்ட ஆட்சியரிடம் பெண்கள் மனு...

12:07 PM Feb 08, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியில் உள்ள ராஜபாளையம் என்ற கிராமத்தில் அரசு மதுபான கடை அமைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், தற்போது கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில், தங்களுடைய கிராமத்தில் டாஸ்மாக் கடை கண்டிப்பாக அமைக்கக் கூடாது என்று வலியுறுத்தி அக்கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

ADVERTISEMENT

டாஸ்மாக் கடைகள் ஊருக்குப் புறம்பே இருக்கக்கூடிய பகுதியில் அமைக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை இருக்கையில், ஊருக்குள் அதுவும் மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் டாஸ்மாக் கடையை கொண்டுவருவது முறை அல்ல என்பதை வலியுறுத்தி, இந்த மனு அளிக்கப்படுவதாக அப்பெண்கள் தெரிவித்தனர். மேலும் அதையும் மீறி டாஸ்மாக் கடை அமைக்கப்படும் பட்சத்தில் நாங்கள் ஒன்று திரண்டு அந்த டாஸ்மாக் கடையை அகற்றுவோம் என்று தெரிவித்துள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT