Skip to main content

உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாதர் சம்மேளனத்தை சேர்ந்த பெண்கள் சாலை மறியல்

Published on 28/06/2018 | Edited on 28/06/2018


திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சேர்ந்த புவனேஸ்வரி என்கிற பெண்ணை விசாரணை என்கிற பெயரில் தாக்கிய பெண் உதவி ஆய்வாளர் மகாலெட்சுமி மீது நடவடிக்கை எடுக்காததை  கண்டித்து இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தை சேர்ந்த 200க்கும் மேற்ப்பட்ட பெண்கள் புதிய பேருந்து நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள விட்டுக்கட்டியை சேர்ந்தவர் புவனேஸ்வரி இவருக்கும் ஆலத்தம்பாடியை சேர்ந்த மகேஸ்வரிக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் மகேஷ்வரி புவனேஷ்வரி மீது ஆலிவலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் உதவி பெண் ஆய்வாளர் மகாலெட்சுமி திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனது மகளின் சிகிச்சைக்காக இருந்த புவனேஸ்வரியை விசாரணை என்று கூறி அழைத்து வந்து மகாலெட்சுமி கடுமையாக தாக்கியுள்ளார்.
 

Women from Madar Sammelan road blockade

 

இதில் படுகாயமடைந்த புவனேஸ்வரி திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது இந்திய மாதர் தேசிய சம்மேளன நிர்வாகிகள் சந்தித்து புவனேஸ்வரிக்கு ஆறுதல் கூறினர். பிறகு உதவி ஆய்வாளர் மகாலெட்சுமி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் சாலை மறியல் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தனர்.
 

மகாலெட்சுமி மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காதால் இன்று காலை 10. மணியளவில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தை சேர்ந்த 300க்கும் மேற்ப்பட்ட பெண்கள் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
 

அங்கு வந்த காவல்துறையினருக்கும் மாதர் சங்கத்தினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது துணை கண்காணிப்பாளர் இனிக்கோ திவ்யன் இன்னும் 10 நாட்களில் விசாரணை மேற்கொண்டு மகாலெட்சுமி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதி அளித்ததின் பேரில் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

உழைக்கும் பெண்களுக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த ஆரி

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
aari arjunan gift to 10 working womens

நடிகர் ஆரி அர்ஜுனன் திரைப்படங்களை தவிர்த்து ‘மாறுவோம் மாற்றுவோம்’ என்ற அறக்கட்டளையையும் நடத்தி வருகிறார். இதன் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார். அந்த வகையில் தன்னுடைய தாயின் நினைவாக உழைக்கும் பெண்களுக்கு தங்க நாணயம் கொடுத்து மகிழ்ந்துள்ளார். 10 பெண்களைத் தேடிச் சென்று அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுல்ள அவர், “ஒவ்வொரு மகளிர் தினம் வரும் போதெல்லாம் பெண்களை கொண்டாடுறோம். வாழ்த்து சொல்றோம். அதைத் தாண்டி என்ன செய்றோம் என்ற கேள்வி ஒவ்வொரு மார்ச் மாசம் வரும்போதும் எனக்குள்ளே இருந்திட்டே இருக்கும். அந்த வகையில் இந்த மார்ச் மாசம், இந்த சமூகத்திற்கு வேலை செய்யக்கூடிய பெண்களை நம்ம ஏதோ ஒரு வகையில் மரியாதை செய்யணும் என்ற நோக்கத்தில் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளையின் சார்பாக ஒரு சின்ன முயற்சி.

aari arjunan gift to 10 working womens

எங்க அம்மாவின் நினைவாக ஒவ்வொரு வருஷமும் தொடர திட்டமிட்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் சர்ப்ரைஸை நோக்கி தான் வாழ்க்கையே நடந்துக்கிட்டு இருக்கு. அந்த வகையில் பெண்களை கௌரவித்து சர்ப்ரைஸாக ஒரு கிஃப்ட் கொடுக்க வேண்டும் என்ற முயற்சி. உழைக்கும் பெண்களையும் சமூக மாற்றத்திற்காக உழைக்கக் கூடிய பெண்களின் வாழ்வை மாற்றும் முயற்சியாக எடுக்க இருக்கோம்” என்றார். பின்பு தூய்மைப் பணியாளர்கள் 3 பேர், பெட்ரோல் பங்கில் பணியாற்றும் 3 பேர், சாலையில் கூழ் கடை வைத்திருக்கும் 2 பேர் மற்றும் அவர் நடித்து வரும் ‘ரிலீஸ்’ படத்தின் படப்பிடிப்பில் பாத்திரம் கழுவும் 2  பேர் என மொத்தம் 10 பெண்களை நேரில் சந்தித்து தங்க நாணயம் பரிசாக வழங்கினார் ஆரி அர்ஜுனன்.