Skip to main content

யோகா பயிற்சியாளர் மீது பாலியல் புகார்!

Published on 07/10/2021 | Edited on 07/10/2021

 

Yoga Practitioner women complaint chennai police

 

ஹாங்காங்கில் கின்னஸ் சாதனை படைத்த பிரபல யோகா பயிற்சியாளர் யோகராஜ், பாலியல் புகாரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். யோகராஜ் மீதான குற்றச்சாட்டுகள் என்ன என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம். 

 

தடகள பயிற்சியாளர் நாகராஜ், கராத்தே பயிற்சியாளர் கெபிராஜ் வரிசையில் அடுத்ததாக பாலியல் புகாரில் சிக்கியுள்ளார் யோகராஜ். தற்போது சென்னை கோடம்பாக்கத்தில் வசித்துவரும் இவர், கடந்த 2015ஆம் ஆண்டு ஹாங்காங்கில் நடந்த நிகழ்வில் தொடர்ந்து 40 மணி நேரம் யோகா செய்து கின்னஸ் சாதனை படைத்தார். இதுவே இவர் பிரபலமடைய காரணம். யோகா கலையைக் கற்போரிடையே பிரபலமாக உள்ள இவர் மீது சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

அவரிடம் யோகா பயிற்சியைப் பயில சென்றபோது காதலிப்பதாகக் கூறிப் பழகத் தொடங்கிய யோகராஜ், பின் நாட்களில் தொல்லை கொடுக்கத் தொடங்கியதாக அந்தப் பெண் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அதற்கான ஆடியோவையும் அந்தப் பெண் வெளியிட்டுள்ளார். 

 

'பார்ட்னர் யோகா' என்னும் முறையைக் கற்றுக்கொடுப்பதாகக் கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்தப் பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார். சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறி வீட்டிற்கு அழைத்து, குளிர்பானத்தில் மயக்க மருந்தைக் கலந்துகொடுத்து, பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அதனை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டுவதாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் அந்தப் பெண். 

 

இது தொடர்பான புகாரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், அந்தப் பெண் அளித்த வாட்ஸ் ஆப் தகவல்கள், குரல் பதிவுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ததோடு, குற்றச்சாட்டுக்கு ஆளான யோகராஜையும் அழைத்து விசாரணை செய்தனர். அதைத் தொடர்ந்து, அவர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்த காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அவரை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.