Skip to main content

நடைப்பயிற்சி வந்த பெண்ணுக்கு இரும்புக்கம்பியால் அடி!! வீட்டு சுவரில் நாய் சிறுநீர் கழித்ததற்காக வெறிச்செயல்!!

Published on 28/10/2018 | Edited on 28/10/2018

வீட்டு சுவரில் நாய் சிறுநீர் கழித்ததற்காக நாயுடன் நடைப்பயிற்சி சென்ற பெண்ணை அப்பகுதியில் உள்ள ஒருவர் இரும்புக் கம்பியால் தாக்கிய வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

 

RR

 

சென்னை நங்கநல்லூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சுகுணா என்பவர் தனது வளர்ப்பு நாயுடன் இன்று அதிகாலை நடை பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது ஒரு குறிப்பிட்ட பகுதியில் சக்தி என்பரது  வீட்டின் அருகே சென்று கொண்டிருந்தபொழுது நாய் பலமாக குறைத்ததாகவும், மேலும் சக்தி வீட்டின் சுவர் மீது நாய் சிறுநீர் கழித்ததாகவும் கூறப்பட்ட நிலையில் சக்தி ஒரு இரும்புக் கம்பியால் நாயின் உரிமையாளரான சுகுணாவை பலமாக தாக்கியுள்ளார். அவர் தாக்கும்பொழுது எடுத்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

 

RR

 

இதனை அடுத்து பலத்த காயத்துடன் மீட்கப்பட்ட  சுகுணா ஆதம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சக்தியை தேடி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்