Skip to main content

தண்ணீரில் வடைசுட்டு மாதர் சங்கம் நூதனப் போராட்டம்!

Published on 22/10/2019 | Edited on 22/10/2019

விலைவாசி உயர்வைக் கண்டித்து தண்ணீரில் வடைசுட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டையில் செவ்வாய்க் கிழமையன்று நூதனப் போராட்டம் நடந்தது.

விலைவாசி உயர்வைக் கண்டித்தும்,ரேசன் கடைகளில் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை போதுமான அளவு இருப்பு வைத்து வழங்கக் கோரியும் மாதர் சங்கம் சார்பில் வறுமை ஒழிப்பு நூதன பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது.

 

 women Association's protest


அதனடிப்படையில் புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் டி.சலோமி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டத் தலைவர் பி.சுசீலா, பொருளாளர் எஸ்.பாண்டிச்செல்வி, துணைச் செயலாளர் கே.நாடியம்மை மற்றும் ஏ.சாந்தா, பண்டிச்செல்வி, கவிதா உள்ளிட்டோர் பேசினர்.

போராட்டத்தின் போது கடுமையான உயந்துள்ள அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை வெளிப்படுத்தும் விதமாக சாலையில் பொய்யான அடுப்பு வைத்து அதில் தட்டு வைத்து தண்ணீரில் வடைசுட்டு சாப்பிடும் போராட்டத்தில் ஈடுபட்டு தங்களின் எதிர்ப்புணர்வை பெண்கள் வெளிப்படுத்தினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளத்தனமாக மது விற்ற பெண்கள்; சுற்றி வளைத்த காவல்துறை

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
police arrested the women who sold liquor by hiding it at home.

வேலூர் மாநகருக்குட்பட்ட விருப்பாட்சிபுரம் பகுதியில் டாஸ்மாக் மதுபானத்தை வீட்டில் பதுக்கி வைத்து 24 மணி நேரமும் விற்பனை செய்து வருவதாக, வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணனுக்கு வந்த ரகசிய தகவலின் பேரிலும், எஸ்.பியின் உத்தரவின் பேரிலும் வேலூர் டி.எஸ்.பி திருநாவுக்கரசு தலைமையிலான தனிப்படை காவலர்கள் நோட்டமிட்டு வந்தனர்.

கள்ளத்தனமாக வீட்டில் பதுக்கி வைத்து டாஸ்மாக் மது விற்பனை செய்து கொண்டிருந்த ஜான்சிராணி மற்றும் சாந்தி ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடமிருந்து மதுபான பாட்டில்களை பறிமுதல்  செய்துள்ளனர். இது தொடர்பாக பாகாயம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

போதைப்பொருள் பதுக்கல்; இறால் பண்ணையை இடித்து தரைமட்டமாக்கிய அதிகாரிகள்

Published on 15/03/2024 | Edited on 15/03/2024

 

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே வெளிவயல் கிராமத்தில் உப்பளம் நடத்த அரசு நிலத்தை குத்தகைக்கு பெற்று அந்த நிலத்தில் பலர் சட்டவிரோதமாக இறால் பண்ணை நடத்தி வருகின்றனர். இதற்காக தவறான முகவரிகள் கொடுத்து மின்சாரம் பெற்று நடத்தி வருகின்றனர். இதுபோல உப்பளம் நடத்த அனுமதிபெற்ற ஒரு இறால் பண்ணையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு கஸ்டம்ஸ் அதிகாரிகள் திடீர் ஆய்வுகள் செய்து ரூ.112 கோடி மதிப்புள்ள கஞ்சா ஆயில், லேகியம் மற்றும் 874 கிலோ கஞ்சா மூட்டைகளைக் கைப்பற்றி அதே இடத்தில் இருந்த சாராய ஊறலையும் அழித்து கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை சரக்கு வாகனத்தில் அள்ளிச் சென்றனர்.

இது சம்பந்தமாக 3 பேரை கைது செய்து விசாரணை செய்து வரும் நிலையில், இந்த கடத்தலில் மேலும் பல பெரும்புள்ளிகள் சிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கைப்பற்றப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை புதன்கிழமை புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில் வியாழக்கிழமை ஆவுடையார்கோயில் வட்டாட்சியர் மார்டின் லூதர் கிங், மீன்வளத்துறை உதவி இயக்குநர் பஞ்ச ராஜா, சாதிக் பாட்சா, கனகராஜ் ஆகியோர் சட்டவிரோதமாக செயல்படும் இறால் பண்ணைகளை மூடி ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது ரூ.112 கோடி மதிப்புள்ள கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த இறால் பண்ணை கொட்டகையை பொக்லைன் இயந்திரம் மூலம் உடைத்து தரைமட்டமாக்கினர். மேலும் இறால் பண்ணை கரைகள் உடைக்கப்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் சட்டவிரோதமாக செயல்படும் இறால் பண்ணை ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்ற போது பண்ணை குட்டைகளில் இறால் குஞ்சுகள் விட்டிருப்பதால் 2 மாத அவகாசம் வேண்டும் என்று அதிகாரிகளிடம் பேசி அவகாசம் பெற்றுள்ளனர்.

பரபரப்பான சூழ்நிலையில் கோட்டைப்பட்டினம் டிஎஸ்பி கௌதமன் தலைமையிலான ஏராளமான போலீசார் பாதுகாப்பு செய்திருந்தனர். போதைப் பொருட்கள் பதுக்கி வைத்திருந்த இறால் பண்ணை கொட்டகை மற்றும் சட்டவிரோத இறால் பண்ணையை அதிகாரிகள் உடைத்து தரைமட்டமாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.