Skip to main content

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் அமைப்பு போராட்டம்

Published on 28/05/2022 | Edited on 28/05/2022

 

women association struggle remove tasmac kallakurichi

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள வரதப்பனூர் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட புக்கிவாரி கிராமத்தில் பல வருடங்களாக டாஸ்மாக் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் குடித்துவிட்டு மது பிரியர்கள் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதால் அடிக்கடி விபத்துகள் நடப்பதாக கூறப்படுகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் குடித்துவிட்டு போதையில் உள்ளே சென்று வீண் தகராறில் ஈடுபடுவதும், பெண்கள்  மீது பாலியல் அத்து மீறல்கள் செய்ய முயல்வது போன்ற பல செயல்களிலும் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. 

 

இதையடுத்து இந்த டாஸ்மாக் கடையை அகற்ற கோரி மக்கள் இரண்டு முறை கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஊராக வளர்ச்சி துறை அதிகாரிகளுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புறக்கணித்துள்ளனர். 

 

இதனைத் தொடர்ந்து அதிகாரிகளின் போக்கை கண்டித்து வரதப்பனூர் பகுதியில் உள்ள அண்ணா நகர், புக்கிரவாரி, புதூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு நேற்று (27.5.2022) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலின் பேரில்  கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி ரவிச்சந்திரன் சின்னசேலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டக்குழு பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது கடையை உடனே அகற்றினால் தான் அந்த இடத்தை விட்டு நகர்வோம் என மகளிர் குழு பெண்கள் பிடிவாதமாக கூறியுள்ளனர் அப்போது காவல்துறை அதிகாரிகள் உங்கள் கோரிக்கைகளை உயர் அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி விரைவில் கடையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் போராட்டத்தை மகளிர் குழுவினர் தற்போதைக்கு கைவிடுவதாக கூறி கலைந்து சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

குடிப்பழக்கத்தை தட்டிக்கேட்ட பாட்டியை கொன்ற பேரன்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Grandson attack grandmother for drunkenness

குடிப்பழக்கத்தை கண்டித்த பாட்டியை பேரனே கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ளது சாரூர். இந்த பகுதியில் வசித்து வந்தவர் தாசம்மாள் (80). இவருடைய மகன் புஷ்பராஜ் என்பவருக்கு அஜித் மகன் இருக்கிறார். அவருக்கு வயது 23.

குடும்ப பிரச்சனை காரணமாக புஷ்பராஜின் மனைவியை பிரிந்து சென்று விட்டார். இதனால் புஷ்பராஜூம் அவருடைய மகன் அஜித்தும் தாசம்மாளுடன் வசித்து வந்தனர். அண்மையில் உடல்நிலை சரியில்லாமல் புஷ்பரஜ் இறந்து விட்டார் .

அதன் பிறகு பாட்டியுடன் அஜித் மட்டும் வசித்து வந்தார். அந்த பகுதியில் பெயிண்டிங் வேலைகளுக்கு சென்று வந்த அஜித் குடிப்பழக்கத்திற்கு நாளடைவில் அடிமையாகி விட்டார். இந்நிலையில் பாட்டி  தாசம்மாள் பெயரில் உள்ள 15 சென்ட் நிலத்தை தன்னுடைய பெயருக்கு எழுதி வைக்கும்படி அஜித் மது அருந்திவிட்டு ரகளை செய்து வந்துள்ளார்.

வழக்கம்போல் நேற்று இரவு 11 மணிக்கு மது குடித்துவிட்டு வந்த அஜித் பாட்டி தாசதாசம்மாளிடம் இது தொடர்பாக சண்டை போட்டுள்ளார். அப்பொழுது பாட்டி தட்டி கேட்டுள்ளார். மதுபோதையில் இருந்த அஜித் தாசம்மாளை கீழே தள்ள, சுவரில் தலை மோதி சம்பவ இடத்திலேயே தாசம்மாள் உயிரிழந்தார். தான் தாக்கியதால் பாட்டி இறந்ததை அறிந்துகொண்ட அஜித் பயத்தில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.