Skip to main content

பிரசவத்துக்கு ஆம்புலன்ஸில் சென்ற பெண்ணுக்கு விவசாய வயலில் குழந்தை பிறந்தது

Published on 04/01/2020 | Edited on 04/01/2020

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தாலுக்காவுக்கு உட்பட்டது கீழ்மிட்டாளம் கிராமம். இக்கிராமத்தை சேர்ந்த தொழிலாளி 25 வயதான சிலம்பரன். இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி சோனியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் 8 மாதங்களுக்கு முன்பு சோனியா மூன்றாவது முறை கர்பமாகியுள்ளார். நரியம்பட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடர்ச்சியாக மருத்துவ பரிசோதனைகள் செய்துக்கொண்டு வந்தார். 10வது மாதம் நெருங்கிய நிலையில் பிரசவ வலி ஜனவரி 3ந்தேதி காலை தொடங்கியுள்ளது. உடனடியாக நரியம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்துள்ளனர்.

 

The woman who went to the ambulance for childbirth gave birth to a baby in a farm


அங்குள்ள மருத்தவர்கள் பரிசோதித்துவிட்டு உடனடியாக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லச்சொல்லி கடிதம் தந்துள்ளனர். அதோடு அங்குள்ள 108 ஆம்புலன்ஸ் மூலமாக வேலூர்க்கு சோனியாவை அழைத்துக்கொண்டு சென்றுள்ளனர் உறவினர்கள்.

நரியம்பட்டில் இருந்து செல்லும்போது ரகுநாதபுரம் கிராமத்தை நெருங்கியபோது சோனியா பிரசவவலியின் உச்சத்தால் கதறினார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வண்டியை சாலையின் ஓரம் நிறுத்தியுள்ளார். ஆம்புலன்ஸ்சில் உள்ள உதவி செவிலியர் சோனியாவுக்கு உதவி செய்துள்ளார்.

இந்நிலையில் நெல் வயலில் வேலை செய்துக்கொண்டுயிருந்த பெண்கள், ஆம்புலன்ஸில் இருந்து பெண்ணின் அழுகுரல் வருவதை கேட்டு ஓடிவந்தனர். பிரசவ வலி என தெரிந்ததும் உடனடியாக அந்த பெண்ணை வண்டியில் இருந்து கீழே இறக்கி வயல் வெளியில் துணியை விரித்து படுக்க வைத்து சுற்றிலும் புடவைகளை தடுப்பாக பிடிக்க வைத்து பழைய கிராம முறைப்படி பிரசவம் பார்க்க தொடங்கினர் சில பெண்மணிகள். சில நிமிடங்களில் அழகான தேவதை போன்ற பெண் குழந்தை பிறந்தது.

தாய்க்கும், குழந்தைக்கும் ஆபத்து எதுவும் இனியில்லை எனச்சொல்லி அப்பெண்மணிகள் மீண்டும் குழந்தையும், தாயையும் தூக்கிச்சென்று ஆம்புலன்ஸில் ஏற்றி மீண்டும் நரியப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கே அனுப்பிவைத்தனர்.

கடினமான பிரசவம் உடனடியாக மருத்துவக்கல்லூரிக்கு அழைத்து செல்லுங்கள் எனச்சொல்லி அனுப்பப்பட்ட இப்பெண்ணுக்கு வயல்வெளியில் ஏதோச்சையாக பிரசவம் நடந்தது, தாயும் சேயும் நலமாக இருப்பதால் பலரின் பாராட்டுக்களை முகம் தெரியாத அந்த பெண்மணிகள் பெற்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.