Skip to main content

வடிவேலு பட பாணியில் நடந்த சம்பவம்; ஒரு பெண்ணுக்கு 3 கணவர்கள் - திக்குமுக்காடிய காவல்துறை

Published on 23/12/2022 | Edited on 23/12/2022

 

woman who is married to 3 men

 

வடிவேலு நடித்த ஒரு திரைப்படத்தில் ஒரு பெண்ணுக்கு பல கணவர்கள் இருப்பது போல காட்சிகள் வரும் அப்படி ஒரு உண்மைச் சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பூசாரிபாளையத்தைச் சேர்ந்தவர் 24 வயது ஸ்ரீ ராமகண்ணன். இவருக்குக் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு புதுச்சேரி திருபுவனைப் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது அவருடன் நட்பாகப் பழகி வந்துள்ளார் ராம கண்ணன்.

 

இந்த நிலையில் அந்த இளம் பெண்ணின் தோழி ஒருவர் திண்டுக்கல் வேடசந்தூர் பகுதியில் வசித்து வருவதாகவும், அவரைப் பார்ப்பதற்காக ஸ்ரீ ராம கண்ணனை தன்னுடன் வருமாறு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்றதும் அந்தப் பெண் ஸ்ரீராம கண்ணனை தான் காதலிப்பதாகவும் நாம் இருவரும் இங்கேயே திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் ஆசையாகக் கூறி அவரை தன் காதல் வலையில் சிக்க வைத்திருக்கிறார். ஸ்ரீ ராம கண்ணனும் அந்தப் பெண்ணும் வேடசந்தூரில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக பூசாரிபாளையம் வந்துள்ளனர். இருவரும் சில மாதங்கள் குடும்பம் நடத்தி வந்த நிலையில் அந்தப் பெண்ணுக்கும் விழுப்புரம் மாவட்டம் தக்கா கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கும் ஏற்கனவே திருமணம் நடந்துள்ளது ராம கண்ணனுக்குத் தெரிய வந்துள்ளது.

 

இருப்பினும் ஸ்ரீ ராம கண்ணன் அந்தப் பெண்ணை கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பெரிய செவலை கிராமத்தில் உள்ள தனது பெரியப்பா வீட்டில் வைத்து குடும்பம் நடத்தியுள்ளார். இதையடுத்து அந்தப் பெண் தான் கருத்தரித்து இருப்பதாக ஸ்ரீ ராம கண்ணனிடம் தெரிவிக்க, சந்தோசமடைந்த அவர் கடந்த ஜூலை மாதம் தன்னுடைய உறவினர்களை அழைத்து மனைவிக்கு வளையல் அணி விழா நடத்தியுள்ளார். விழா முடிந்த கையோடு புதுச்சேரியில் உள்ள தாய் வீட்டிற்கு அந்தப் பெண்ணை அனுப்பி வைத்துள்ளார். சில மாதங்கள் கழித்து பெண்ணுக்கு அவரது தாய் வீட்டிலேயே குழந்தை பிறந்து இறந்து விட்டது. அதை அடக்கம் செய்துவிட்டோம் என்று அந்தப் பெண் கூறியுள்ளார். 

 

அதை நம்பிய ராமக்கண்ணன், மனைவி உடல்நிலை சரியாகும் வரை அவரது தாய் வீட்டிலேயே இருந்துவிட்டு ஊருக்கு வருமாறு கூறியுள்ளார். பின்னர் ஒரு மாதம் கழித்து மனைவியைப் பார்ப்பதற்காக அவர் தாய் வீட்டிற்குச் சென்ற ஸ்ரீ ராம கண்ணனிடம், அந்தப் பெண்ணின் தாயார் மகள் சில நாட்களுக்கு உங்கள் வீட்டுக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றுவிட்டாளே என்று கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஸ்ரீ ராம கண்ணன், தன் மனைவியின் தோழிகள் உட்பட பல்வேறு இடங்களில் விசாரித்துள்ளார். ஆனால் அவர் எங்கு சென்றார் ? என்ன ஆனார்? என்பது குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த ராமக்கண்ணன் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் மனைவியைக் கண்டுபிடித்துத் தருமாறு புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் துணை ஆய்வாளர் பிரபு மற்றும் போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர்.

 

இந்த நிலையில் ராம கண்ணன் தனது சொந்த வேலை காரணமாக திருக்கோவிலூருக்குச் சென்றுள்ளார். அங்கு ஒரு பெட்ரோல் பங்க்கில் ஒரு இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு ஆணுடன் தனது மனைவி சேர்ந்து வந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரை வழிமறித்து இது யார் ஏன் நம் வீட்டுக்கு வரவில்லை என்று ராம கண்ணன் மனைவியிடம் விசாரித்துள்ளார். அப்போது அந்த பெண் நீ யார் என்றே எனக்குத் தெரியாது அப்படி இருக்க உன் மனைவி என்று என்னை எப்படி கூறுகிறாய் என்று ஏட்டிக்குப்போட்டியாக கேள்வி கேட்டுள்ளார்.

 

இதையடுத்து ஸ்ரீ ராம கண்ணன் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்துள்ளார். அங்கிருந்து விரைந்து வந்த போலீசார் அந்தப் பெண்ணையும் அவருடன் வந்த வாலிபரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது ராம கண்ணனுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை அவருடன் திருமணமே நடக்கவில்லை என்று அந்தப் பெண் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ராமக்கண்ணன் தனக்கும் அந்தப் பெண்ணுக்கும் நடைபெற்ற திருமண புகைப்படங்களை போலீசாரிடம் காட்டி உள்ளார். போலீசார் விசாரணையில் அந்தப் பெண் தற்போது மூன்றாவதாக ஒரு இளைஞரைத் திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது. மேலும் அந்தப் பெண் தனக்கு கர்ப்பம் தரிக்கவில்லை என்றும் தன் வயிற்றில் நீர் கட்டி இருந்தது அதை என் தாய் வீட்டுக்குச் சென்று மருத்துவமனையில் சரி செய்துகொண்டேன். தற்போது மூன்றாவதாக இந்த இளைஞரைத் திருமணம் செய்து கொண்டேன் என்று கூறியுள்ளார்.

 

அவர் திருமணம் செய்து கொண்ட அந்த இளைஞரிடம் போலீசார் கேட்டபோது இந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே இரண்டு திருமணம் நடந்தது தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார். இந்தப் பெண்ணால் பாதிக்கப்பட்ட ஆண்கள் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து உரியத் தீர்வு காணுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.