Skip to main content

கல்லூரி ஆசிரியருடன் காதல் திருமணம்; மாணவி திடீர் மாயம்

Published on 22/11/2022 | Edited on 22/11/2022

 

 woman who got married for love Dharmapuri has suddenly gone missing

 

தர்மபுரியில் பெற்றோர் எதிர்ப்பை மீறி கல்லூரி ஆசிரியரைக் காதலித்து மணந்த கல்லூரி மாணவி திடீரென்று மாயமாகியுள்ளார்.

 

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள எர்ரனஹள்ளியைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகள் வித்யா (21). காரிமங்கலத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்சி., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இதே கல்லூரியில் கவுரவ விரிவுரையாளராகப் பணியாற்றி வந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த ராஜ்குமார் (40) என்பவருடன் நட்பாக பழகி வந்தார். அவர்களுக்குள் ஏற்பட்ட நெருக்கமான நட்பு காதலாக மலர்ந்தது.  

 

அவர்களின் காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரியவந்ததை அடுத்து அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மூன்று மாதத்திற்கு முன்பு காதலர்கள் இருவரும் இருவீட்டாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பின்னர் கணவர் வீட்டில் வித்யா வசித்து வந்தார். 

 

இதற்கிடையே, எர்ரனஹள்ளியில் உள்ள தந்தையின் வீட்டிற்கு வித்யா வந்தார். இந்நிலையில் நவ.17-ம் தேதி அதிகளவு தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை மீட்டு உடனடியாக பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிய வித்யாவை நவ.20-ம் தேதி முதல் திடீரென்று காணவில்லை. இதுகுறித்து அவருடைய அண்ணன் மாதன் அளித்த புகாரின் பேரில் பாலக்கோடு காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.