Skip to main content

தோஷம் கழிப்பதாக தோழியை மோசம் செய்த பெண்!

Published on 24/09/2021 | Edited on 24/09/2021

 

Woman who cheated her friend arrested in nagarkovil

 

மூடநம்பிக்கையை ஒழிக்க என்னதான் முயற்சி மேற்கொண்டாலும் கடவுள்களின் பெயரைச் சொல்லி இன்னும் மக்களை ஏமாற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த வகையில்தான் தோழியாகப் பழகி, பல பெண்களிடம் தோஷங்கள் கழிப்பதாகக் கூறி ஏமாற்றி, நகை மற்றும் பணத்தைப் பறித்த நாகர்கோவிலைச் சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

 

நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தைச் சேர்ந்த கஸ்தூரிராஜன் மனைவி சுஜிதா (34). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரும் நெருங்கிய தோழிகளாகப் பழகிவந்தனர். இதில் சுஜிதா, தினமும் பல்வேறு கோவில்களுக்குச் சென்றுவருவதுடன், குறி சொல்பவராகவும் தோஷங்கள் கழிக்கும் மந்திரவாதியாகவும் தன்னைக் காட்டிவந்தார். இந்த நிலையில், தோழியின் தாலிக்குத் தோஷம் இருப்பதாகவும் அதேபோல் அவரது இரண்டு மகள்களின் தாலி பாக்கியத்திற்குத் தடை இருப்பதாகவும் கூறியுள்ளார்.

 

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தோழி, தன்னுடைய கணவருக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்றும் மேலும் தனது இரண்டு மகள்களுக்குத் திருமணமும் நடக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கிறார். இதை தன்னுடைய திட்டத்துக்கு சாதகமாக்கிக் கொண்ட சுஜிதா, “அதற்கு வீட்டில் இருக்கும் நகைகளை வைத்து தோஷம் கழிக்க வேண்டும். அந்தப் பரிகார பூஜையை நானே செய்கிறேன்” எனக் கூறி பூஜைக்கான ஏற்பாடுகளை செய்வதாக கூறி நகைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கியுள்ளார். அப்படி அவர் வாங்கிய நகை 22 பவுன்.

 

அதன் பிறகு தாலிச் செயினையும் கேட்டுள்ளார். இதனால் சந்தேகமடைந்த தோழி, கணவனிடம் விசயத்தைக் கூறியுள்ளார். கணவர், சுஜிதாவிடம் கேட்டபோது அவரின் மழுப்பல் பேச்சில் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து மனைவி மூலம் வடசேரி போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீஸ் விசாரணையில் அவள் போலியான மந்திரவாதி என தெரியவந்தது.

 

இதையடுத்து சுஜிதாவை கைது செய்து விசாரித்த போலீசார், சுஜிதா இந்தப் பெண்ணை மட்டுமல்ல, அவர் செல்லும் கோவிலுக்கு வரும் பெண்களிடமும் அதேபோல் திருமண நிகழ்ச்சிகளுக்குப் போகும்போது அங்கு வரும் பெண்களிடமும் நைசாக பேசி, அவர்களைத் தோழியாக்கி, இப்படி தோஷம் இருப்பதாகக் கூறி அவர்களிடமிருந்து நகைகள் மற்றும் பணத்தைப் பறித்துள்ளார். இவரிடம் பல பெண்கள் ஏமாந்திருப்பதாக போலீசார் கூறினார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.