Skip to main content

மணல் கொள்ளையை தடுத்த பெண் வி.ஏ.ஓ;கொலைவெறி தாக்குதல் நடத்த முயன்றவர் கைது !

Published on 05/09/2018 | Edited on 05/09/2018

கடந்த மாதத்தில் திருச்சி மணல் கொள்ளையில் ஈடுபட்ட ஓவர் லோடு மணல் லாரியை தடுத்த ஆர்.ஐ. ஆளும்கட்சி பிரமுகர் கொலைவெறி தாக்குதல் நடந்தி கொலைமிரட்டல் விடுத்ததும் உயிருக்கு பயந்து போலில் புகார் செய்தும் அமைச்சர் வளர்மதியின் சிபாரிசில் கடைசி வரை கைதிலிருந்து தப்பித்து கடைசியில் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார். 

இதை தொடர்ந்து தற்போது திருச்சி மாவட்டத்தின் எல்லைப்பகுதியான தொட்டியம் அருகே பெரியபள்ளிபாளையத்தில் மணல் கொள்ளை தடுத்த பெண் வி.ஏ.ஓவை தாக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

 

 

SAND

 

 

 

தொட்டியம் அருகே உள்ள பெரியபள்ளிபாளையம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் விமலாதேவி. இவர் பெரியபள்ளிபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மணல் திருட்டை தடுக்க ரோந்து பணியில் ஈடுபட்டும், மணல் திருட்டு குறித்து அவ்வப்போது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். தற்போது காவிரியில் தண்ணீர் பெருவெள்ளமாக ஓடி முடிந்த நிலையில் கிளை ஆறுகளில் தண்ணீர் இல்லாதாதால் மீண்டும் மணல் கொள்ளை ஆரம்பித்துள்ளனர். 
 

கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரியபள்ளிபாளையம் காவிரி ஆற்றுப்பகுதியில் திருடிசெல்வதற்காக சாக்கு மூட்டைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகளை ரோந்து பணியில் கண்டுபிடித்த விமலாதேவி அனைத்து மூட்டைகளையும் கத்தியால் கிழித்து மணலை மூட்டைகளில் திருடி செல்லாதவாறு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். 
 

இந்நிலையில் பெரியபள்ளிபாளையத்தை சேர்ந்த தங்கமணி என்பவர் மகன் அரவிந்த் என்ற வாலிபர் விஏஓ விமலாதேவியிடம் ஆற்றில் மணல் எடுப்பதை எப்படி தடுக்கலாம் எனக்கூறி கோபமாக அவரை தாக்க முயன்றிருக்கிறார். அவர் தாக்க வந்தலில் தப்பித்த விஏஓ விமலாதேவி காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். 
 

இதன் பேரில் காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரவிந்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருச்சியில் மணல் கொள்ளைக்கு பல்வேறு மட்டத்திலும் அதிகாரிகள் உடந்தையாக இருப்பதும் விமலாதேவி போன்று நேர்மையான அதிகாரிகளை மணல் கொள்ளையர்கள் மிரட்டுவது வாடிக்கையாக கொண்டே இருக்கிறது.   

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Next Story

பார் மேற்கூரை இடிந்து 3 பேர் உயிரிழப்பு; 12 பேர் மீது வழக்கு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Bar roof collapses, 3 lost live Case against 12 people

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமாக இயங்கி வந்த பாரின் முதல் தளத்தின் மேற்கூரை நேற்று இரவு திடீரென யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்தனர். உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த விபத்து குறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக் கொண்டுள்ளதாகத் தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின் போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் முதற்கட்டமாக 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள அபிராமபுரம் போலீசார், பாரின் மேலாளர் சதீஷ் உட்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.