Skip to main content

பெண் போலீஸ் தற்கொலை;டார்ச்சர் செய்த கணவன் கைது;மாமியார், மாமனாருக்கு வலைவீச்சு!

Published on 14/09/2018 | Edited on 14/09/2018

சேலத்தில் பெண் போலீஸ் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கணவரை போலீசார் கைது செய்தனர். மாமனார், மாமியார் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.


சேலம் சூரமங்கலம் புது ரோடு இந்திரா நகரை சேர்ந்தவர் கவுதமன். இவருடைய மனைவி புவனா என்கிற புவனேஸ்வரி (33). இவர்களுக்கு மூன்றரை ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. சேலம் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வந்த புவனேஸ்வரி கடந்த ஜூலை 9ம் தேதி முதல் ஜலகண்டாபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.


திருமணத்தின்போது புவனேஸ்வரியின் பெற்றோர் 25 பவுன் நகைகள், கட்டில், பீரோ, வீட்டு சாமான்கள் ஆகியவற்றை சீதனமாக கொடுத்துள்ளனர். ஆனால், வரதட்சணையாக கூடுதல் நகைகள் வாங்கி வருமாறு கணவர் வீட்டில் தொடர்ந்து சித்ரவதை செய்துள்ளனர். வரதட்சணை வாங்கி வராமல் வீட்டுக்குள் நுழையக்கூடாது என்று கவுதமனின் பெற்றோர் தடை விதித்ததோடு, கணவருடன் பேசவும் தடை விதித்துள்ளனர். இதனால் அவர் கடந்த சில மாதங்களாக பெற்றோர் வீட்டில் தங்கியிருந்து, பணிக்குச் சென்று வந்தார்.

 

police suicide


இது ஒருபுறம் இருக்க, புவனேஸ்வரியிடம் இருந்து விவாகரத்து கேட்டு கவுதமன் வக்கீல் நோட்டீசும் அனுப்பி உள்ளார். இந்நிலையில் கடந்த 9ம் தேதியன்று கணவரை பார்க்கச் சென்றபோதும், அவரை திட்டி அனுப்பி விட்டாராம். இதனால் விரக்தியில் இருந்த புவனேஸ்வரி, செப்டம்பர் 10ம் தேதி அதிகாலையில் வீட்டில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். திருமணம் முடிந்து ஏழு ஆண்டுகளுக்குள் தற்கொலை செய்து கொண்டதால், ஆர்டிஓ விசாரணையும் நடந்து வருகிறது. இதற்கிடையே கடந்த 12ம் தேதி, தற்கொலைக்கு முன் புவனேஸ்வரி எழுதிய வைத்திருந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

 

police suicide

 

அந்தக் கடிதத்தில், மாமியார் சித்ரா, மாமனார் விஸ்வநாதன், நாத்தனார்கள் தேவகி, நித்யா மற்றும் கணவர் கவுதமன் ஆகியோர்தான் என் சாவுக்குக் காரணம் என்று எழுதி வைத்திருந்தார். மேலும், வரதட்சணை கேட்டு கணவரோடு சேர்ந்து வாழ விடாமல் கொடுமை படுத்தினர் என்றும், பல பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு கணவரும் சித்ரவதை செய்தார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.


இதையடுத்து கவுதமனை சூரமங்கலம் போலீசார் நேற்று கைது செய்தனர். தலைமறைவாகிவிட்ட மாமியார், மாமனார் ஆகியோரை தேடி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

இறுதிக்கட்ட பரப்புரை; சேலத்தில் எடப்பாடி 'ரோட் ஷோ'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 Final campaign; Edappadi 'Road Show' in Salem

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தஙளது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரங்கஙளை நடத்தி வருகின்றனர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பரப்புரை முடிவடைய இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 'ரோட் ஷோ' என்னும் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை இந்த ரோட் ஷோ நடைபெறுகிறது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி வேட்பாளருடன் எடப்பாடி பழனிசாமி வாகன பேரணி நடத்தி வருகிறார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வின்சென்ட், திருவள்ளுவர் சிலை, முதல் அக்ரகாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாகக் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.