Skip to main content

இறந்த தந்தை உடல் முன் பெண்ணுக்கு தாலிக்கட்டிய ஆசிரியர்!

Published on 09/08/2019 | Edited on 09/08/2019

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே திடீரென தந்தை இறந்ததால், செப்டம்பர் மாதம் தனக்கு நடக்க இருந்த திருமணத்தை இறந்த தந்தையின் உடல் முன்பு பெண்ணுக்கு தாலிக்கட்டி கரம் பிடித்த ஆசிரியரின் நெகிழ்ச்சி சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

திண்டிவனம் அடுத்த சிங்கனூர் பகுதியை சேர்ந்த தெய்வமணி - செல்வி ஆகியோரது மகன் அலெக்சாண்டர் இவர் மயிலம் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். 

 

 Woman talisman teacher in front of dead father's body TINDIVANAM DISTRICT

 

 

இந்நிலையில் அதே பள்ளியில் பணிபுரிந்து வரும் மயிலம் அடுத்த கொணமங்கலத்தைச் சேர்ந்த பாலசுந்தரம் - அன்னபூரணி ஆகியோரது மகள் ஜெகதீஸ்வரி என்பவரை வரும் 02 -09-2019 அன்று மயிலம் முருகன் கோவிலில் திருமணம் செய்வதாக முடிவு செய்யப்பட்டு பத்திரிக்கை அடிக்கும் பணி நடைபெற்று வந்தது.

 

 

 Woman talisman teacher in front of dead father's body TINDIVANAM DISTRICT

 

 

இந்நிலையில் அலெக்சாண்டரின் தந்தை தெய்வமணி நேற்று இரவு திடீரென்று காலமானார். இதனையடுத்து தனது தந்தை மீது கொண்ட மதிப்பு மற்றும் மரியாதையின் காரணமாகவும், அவர் மீது கொண்ட அளவற்ற பாசத்தின் காரணமாகவும், தனது தந்தை கையால் மாங்கல்யத்தை பெற்று திருமணம் நடைபெற வேண்டுமென விரும்பி தனது விருப்பத்தை தனது தாய் செல்வியிடமும், பெண் வீட்டாரிடமும் அலெக்ஸாண்டர் தெரிவித்தார்.

 

அதன் தொடர்ச்சியாக பெண்வீட்டார் கொணமங்கலத்தில் இருந்து சிங்கனூருக்கு இன்று காலை வந்தனர். பின்னர் நண்பர்கள், உறவினர்கள் சூழ மாங்கல்யத்தை தனது தந்தையின் கரங்களால் பெற்று தனது வீட்டிலேயே திருமணத்தை முடித்துக் கொண்டார் ஆசிரியர் அலெக்சாண்டர். இந்த நெகிழ்வான சம்பவம் திண்டிவனத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் இச்செய்தி பரவியதால் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.