கவரிங்நகை மீது தங்க முலாம் பூசி பின்னர்,அதைகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுமார் 12 தனியார் நிதி நிறுவனங்களில் அடகு வைத்து லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்து, சொகுசுகாரில்வலம் வந்த தம்பதியில் கணவனைகொற்றியோடு காவல்துறையினர் கைது செய்த நிலையில், தலைமறைவாக இருந்த மனைவி ஜூன் 22- ஆம் தேதிநாகா்கோவில்நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
நாகா்கோவில்செட்டிக்குளத்தைச்சோ்ந்தஜேசுராஜா(வயது 47) தனது முதல் மனைவியான மீனாவை விவாகரத்து செய்துவிட்டு மார்த்தாண்டம்கழுவன்திட்டையைச்சேர்ந்த அனுஷாவை இரண்டாவது திருமணம் செய்தார். இந்த நிலையில்,இருவரும் ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டுகவரிங்நகைகளை வாங்கி அதில் தங்க முலாம் பூசி பின்னர்அதைதங்க நகை போன்றுநிதிநிறுவனங்களில்அடகு வைத்துள்ளனர்.
அனுஷாகூலிங்கிளாஸ்போட்டுடிப்டாப்உடையணிந்து கொண்டு நகையை அடகு வைப்பதற்கு முன் அந்த பகுதியில் உள்ளஓருமுகவரியைசொல்லி அங்கு வாடகைக்கு இருப்பது போல் கூறி அதன்பிறகு கையில் போட்டியிருக்கும்வளையலைகழற்றி அடகுவைக்ககொடுப்பார்.இதற்காகதனது உண்மையானஆதார்கார்டையும்பயன்படுத்தி வந்தார். நிதி நிறுவனத்தினரும், வாடகைபார்ட்டிஎனகருதி எந்த விசாரணையும் இல்லாமல் பணம் கொடுத்து வந்தனர்.
இப்படி அவர், திங்கள் சந்தை, கருங்கல்,தேங்காப்பட்டணம்,பைங்குளம், நாகர்கோவில், தக்கலை,அஞ்சுகிராமம்போன்ற பகுதிகளில் போலி நகைகளை அடகுவைத்திருக்கிறார். அவள் அடகு வைத்த போலி நகைகள் எல்லாமே 2 பவுன் எடை கொண்டதாகவே தான் இருக்கும்.
இந்த நிலையில், தான்சித்திரங்கோட்டில்இதே போல்ஓருநிதிநிறுவனத்தில்2 பவுன்நகையெனகூறி காப்புஓன்றைஅடகு வைத்து பணத்தைவாங்கிகொண்டு சற்று தொலைவில் நிறுத்தியிருந்த சொகுசுகார்ஓன்றில்ஏறிசென்றார். இதைப்பாா்த்தஅந்தநிதிநிறுவனஉரிமையாளருக்குசந்தேகம் வரவே அந்த காப்பை அவர் வெட்டி பார்த்த போது அதுமுழுவதும்செம்பாக இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, கொற்றியோடு காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததையடுத்து கணவர்ஜேசுராஜாவைகாவல்துறையினர் கைது செய்தனர். அனுஷா தலைமறைவானார். இந்த நிலையில் இந்த விசயம் நிதி நிறுவனம் நடத்துபவர்களின்வாட்ஸ்அப்குரூப்பில்அனுஷாவின் புகைப்படத்துடன் தகவல் பரவியது. இதையடுத்து, அந்தந்தநிதிநிறுவனத்தினர்தங்களின்சிசிடிவிவைபார்த்த போது அதே பெண் பலரின் நிறுவனத்தில் வந்து போலி நகையை அடகுவைத்துசென்றது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த நிதி நிறுவனத்தினர் காவல் நிலையங்களில்புகாா்கொடுத்தனர். இதையடுத்து தனிப்படை அமைத்துஅனுஷாவைதேடி வந்த நிலையில் நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர், அவரை தக்கலை மகளிர் சிறையில் அடைத்தனர்.