Skip to main content

போலி நகைகளை அடமானம் வைத்து ஏமாற்றிய பெண் நீதிமன்றத்தில் சரண்! 

Published on 22/06/2022 | Edited on 22/06/2022

 

 

Woman surrenders in court for cheating on fake jewelery

 

கவரிங் நகை மீது தங்க முலாம் பூசி பின்னர், அதை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுமார் 12 தனியார் நிதி நிறுவனங்களில் அடகு வைத்து லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்து, சொகுசு காரில் வலம் வந்த தம்பதியில்  கணவனை கொற்றியோடு காவல்துறையினர் கைது செய்த நிலையில், தலைமறைவாக இருந்த மனைவி ஜூன் 22- ஆம் தேதி நாகா்கோவில் நீதிமன்றத்தில் சரணடைந்தார். 

 

நாகா்கோவில் செட்டிக்குளத்தைச் சோ்ந்த ஜேசுராஜா (வயது 47) தனது முதல் மனைவியான மீனாவை விவாகரத்து செய்துவிட்டு மார்த்தாண்டம் கழுவன்திட்டையைச் சேர்ந்த அனுஷாவை இரண்டாவது திருமணம் செய்தார். இந்த நிலையில்,இருவரும் ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு கவரிங் நகைகளை வாங்கி அதில் தங்க முலாம் பூசி பின்னர் அதை தங்க நகை போன்று நிதிநிறுவனங்களில் அடகு வைத்துள்ளனர். 

 

அனுஷா கூலிங் கிளாஸ் போட்டு டிப்டாப் உடையணிந்து கொண்டு நகையை அடகு வைப்பதற்கு முன் அந்த பகுதியில் உள்ள ஓரு முகவரியை சொல்லி அங்கு வாடகைக்கு இருப்பது போல் கூறி அதன்பிறகு கையில் போட்டியிருக்கும் வளையலை கழற்றி அடகு வைக்க கொடுப்பார். இதற்காக தனது உண்மையான ஆதார் கார்டையும் பயன்படுத்தி வந்தார். நிதி நிறுவனத்தினரும், வாடகை பார்ட்டி என கருதி எந்த விசாரணையும் இல்லாமல் பணம் கொடுத்து வந்தனர். 

 

இப்படி அவர், திங்கள் சந்தை, கருங்கல், தேங்காப்பட்டணம், பைங்குளம், நாகர்கோவில், தக்கலை, அஞ்சுகிராமம் போன்ற பகுதிகளில் போலி நகைகளை அடகு வைத்திருக்கிறார். அவள் அடகு வைத்த போலி நகைகள் எல்லாமே 2 பவுன் எடை கொண்டதாகவே தான் இருக்கும். 

 

இந்த நிலையில், தான் சித்திரங்கோட்டில் இதே போல் ஓரு நிதிநிறுவனத்தில் 2 பவுன் நகையென கூறி காப்பு ஓன்றை அடகு வைத்து பணத்தை வாங்கி கொண்டு சற்று தொலைவில் நிறுத்தியிருந்த சொகுசு கார் ஓன்றில் ஏறி சென்றார். இதைப் பாா்த்த அந்த நிதிநிறுவன உரிமையாளருக்கு சந்தேகம் வரவே அந்த காப்பை அவர் வெட்டி பார்த்த போது அது முழுவதும் செம்பாக இருந்தது தெரிய வந்தது. 

 

இதையடுத்து, கொற்றியோடு காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததையடுத்து கணவர் ஜேசுராஜாவை காவல்துறையினர் கைது செய்தனர். அனுஷா தலைமறைவானார். இந்த நிலையில் இந்த விசயம் நிதி நிறுவனம் நடத்துபவர்களின் வாட்ஸ் அப் குரூப்பில்  அனுஷாவின் புகைப்படத்துடன் தகவல் பரவியது. இதையடுத்து, அந்தந்த நிதிநிறுவனத்தினர் தங்களின் சிசிடிவிவை பார்த்த போது அதே பெண் பலரின் நிறுவனத்தில் வந்து போலி நகையை அடகு வைத்து சென்றது தெரிய வந்தது. 

 

இதனால் அதிர்ச்சியடைந்த நிதி நிறுவனத்தினர் காவல் நிலையங்களில் புகாா் கொடுத்தனர். இதையடுத்து தனிப்படை அமைத்து அனுஷாவை தேடி வந்த நிலையில் நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர், அவரை தக்கலை மகளிர் சிறையில் அடைத்தனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாமக்கல் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
CM MK Stalin fulfilled the demand of the people of Namakkal 

நாமக்கல் மாவட்டம் கடந்த 1997 ஆம் ஆண்டு 2 வருவாய் கோட்டங்கள், 8 வட்டங்கள், 30 வருவாய் பிர்க்காக்களுடன் (Firka) உருவாக்கப்பட்டது. கடந்த 2011 ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாமக்கல் மாவட்டத்தின் மக்கள் தொகையின் எண்ணிக்கை 17 லட்சத்து 26 ஆயிரத்து 601 ஆகும். நாமக்கல் மாவட்டத்தில் 169 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் உள்ளிட்ட பிற செயற்பதிவாளர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் சங்கங்களையும் சேர்த்து மொத்தம் 816 சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்தியாவில், நாமக்கல் மாவட்டம், கோழிப்பண்ணை, லாரி பாடி பில்டிங், முட்டை உற்பத்தி, ஆமணக்கு எண்ணெய் பதப்படுத்தும் தொழில் ஆகிய பல முக்கிய தொழில்களுக்கு பெயர் பெற்றதாகும். சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, சேலம் மாவட்டத்தில் 45 கிளைகள் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் 29 கிளைகள் என மொத்தம் 74 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் 98.70 கோடி ரூபாய் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் 55.15 கோடி ரூபாய் பங்குத்தொகையுடன் இவ்வங்கி செயல்பட்டு வருகிறது. மேலும், 2020-21 ஆம் ஆண்டில் 22.17 கோடி ரூபாய், 2021-22 ஆம் ஆண்டில் 20.37 கோடி ரூபாய் மற்றும் 2022-23 ஆம் ஆண்டில் 18.24 கோடி ரூபாய் என தொடர்ந்து லாபம் ஈட்டியுள்ளது.

இத்தகைய சூழலில் சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் செயல்பாட்டு பகுதியில் உள்ள நாமக்கல் மாவட்டதிற்கென ஒரு புதிய மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி உருவாக்கிட வேண்டும் என்பது இம்மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். இதனைப் பரிசீலித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும், நாமக்கல் மாவட்ட விவசாயிகளின் நலன் கருதியும் மற்றும் பல்வேறு தொழில் துறையினர் பயன்பெறும் வகையிலும் பல்வேறு சிறப்புகளைக் கொண்ட நாமக்கல் மாவட்டத்திற்கென பிரத்தியேகமாக ஒரு புதிய மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியை உருவாக்கிட முதலமைச்சர் ஆணையிட்டார். இந்நிலையில் இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உருவாக்கி இன்று (6.3.2024) அரசாணை வெளியிடப்பட்டுள்ளது எனத் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

வங்கியில் நூதன மோசடி; போலீஸ் தீவிர விசாரணை

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
Bank scam in Trichy

திருச்சி ரேஸ் கோர்ஸ் ரோடு தாமஸ் தெரு பகுதியில் தனியார் இன்ஜினியரிங் நிறுவனம் அமைந்துள்ளது. இதன் இயக்குநர்களாக திருநாவுக்கரசு, பாஸ்கரன், சிவக்குமார், ஸ்ரீனிவாசன், அர்ச்சனா ஆகியோர் உள்ளனர். இந்த நிறுவனத்தின் காசோலை மற்றும் கணக்கு வழக்குகளில் கையெழுத்திடும் அதிகாரம் திருநாவுக்கரசு மற்றும் பாஸ்கரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்கிக் கணக்குகளை சரிபார்த்தபோது காசோலை கொடுக்காமல் ரூ.18,28,452 லட்சம் வேறு 2 கம்பெனி கணக்குகளில் வரவு ஆகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நிறுவன பொது மேலாளர் ஜெகநாதன் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி மேலாளருக்குத் தகவல் தெரிவித்தார்.

பின்னர் நேரடியாகச் சென்று ஒப்புகைச் சீட்டு கேட்டபோது வங்கி மேலாளர் மற்றும் உதவி மேலாளர் ஆகிய இருவரும் செல்போன் வாயிலாக மேற்கண்ட நிறுவனத்தின் டைரக்டர் ஸ்ரீனிவாசன் பேசுகிறேன் எங்களது வங்கிக் கணக்கிலிருந்து கீழ்க்கண்ட இரு வேறு வங்கிக் கணக்குகளுக்கு ரூ. 8,96,934 மற்றும் ரூ.9,31,518 ஆகிய தொகையை ஆர்.டி.ஜி.எஸ் செய்யுமாறு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் ஆர்டிஜிஎஸ் செய்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் மர்ம நபர் ஒருவர் மேற்கண்ட நிறுவனத்தின் டைரக்டர் பெயரைச் சொல்லி நூதன மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஜெகநாதன், திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.