Skip to main content

மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இரண்டு குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி...

Published on 24/06/2019 | Edited on 24/06/2019

மதம் மாறியதாக  இரண்டு குழந்தைகளையும், அவர்களது தாயையும் கிராம முக்கியஸ்தர்கள் தாக்கியதாகவும், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பாதிக்கப்பட்ட பெண் தனது இரு மகன்களுடன் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகை மாவட்டம் திட்டச்சேரியை அடுத்துள்ள கோதண்டராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தென்கோவன். இவருக்கு வசந்தி என்கிற மனைவியும் வசந்தகோவன், சாமுவேல் என்ற இரு மகன்களும் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் இந்துமதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறி, வாரம் தோறும் ஆலயம் சென்று பிராத்தனையில் ஈடுபட்டு வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம முக்கியஸ்தர்கள் அந்த குடும்பத்தினரை ஊர் முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவிடாமல் ஒதுக்கி வைத்ததோடு, ஊரை காலி செய்ய சொல்லியும் இடையூறு செய்துள்ளனர்.

 

woman poured kerosene at nagapattinam collector office

 

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை தென்கோவன் ஊரில் இல்லாத போது, அவரது வீட்டிற்கு வந்த ஒரு சிலர் வசந்தியையும்,  அவரது இரு மகன்களையும் வன்மமான வார்த்தைகளை கூறி கடுமையாக திட்டி தாக்கியுள்ளனர். இதுகுறித்து வசந்தியும் அவரது குடும்பத்தினரும் திட்டச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனாலும் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மன வேதனை அடைந்த வசந்தி, தனது இரு மகன்களுடன் இன்று காலை நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து தனது மகன்கள் மீதும், தனது உடல் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொள்ள முயன்றார். அப்போது ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பிற்காகநின்றிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அங்கிருந்த குழாயில் மூவரையும் குளிக்க வைத்து விசாரனைக்காக நாகூர் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். 

இதனால் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இது குறித்து விசாரித்தபோது, " கிராமத்தில் அவங்கள யாரும் எதுவும் சொல்லவில்லை, அவங்க தான் தேவையில்லாம, பிரசங்கம்ங்கிற பேர்ல படிக்கிற குழந்தைகளை மடைமாற்றுகின்றனர். அதைத்தான் கண்டித்தோம் அதற்கு பொய் புகார் கூறுகிறார்." என்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார். 

Next Story

தீ பற்றி எரிந்த குடிசை வீடுகள்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
nagai cottages incident Case against BJP

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் நாகையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதனை அறிந்து அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் வீரமணி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் பாஜகவினர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தடைசெய்யப்பட்ட வெடியை விற்பனை செய்த, தம்பிதுரை பூங்கா அருகே உள்ள வெடி கடைக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.