Advertisment

காதலன் பேசவில்லை; தற்கொலை செய்து கொண்ட காதலி!!!

woman passes away in pollachi

கோவை, பொள்ளாச்சி தொழிற்பேட்டையைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி (30) இவரது கணவர் ராமன், சென்னையில் பொறியாளராக பணியாற்றி வந்தார்.கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு புவனேஸ்வரியின் கணவர் ராமன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

Advertisment

இதையடுத்து புவனேஸ்வரி மற்றும் அவரது 13 வயது மகன் ஆகியோர் பொள்ளாச்சி தொழிற்பேட்டையில் உள்ள கே.எல்.எஸ். நகர் பகுதியில் தனியே வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் புவனேஸ்வரிக்கு முகநூல் மூலம் பொள்ளாச்சி சின்னாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த காஜாமொய்தின் ( 27 ) என்பவருடன் நட்பு ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியது.

Advertisment

பின்பு அவருடன் அடிக்கடி தனிமையில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என காஜா மொய்தினிடம் புவனேஸ்வரி கூறியுள்ளார்.அதன் பிறகு இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்தனர்.

இந்நிலையில், புவனேஸ்வரி காஜாவை தொலைபேசியில் அடிக்கடி அழைத்தபோது கைபேசி எண் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளதாகவும் புவனேஸ்வரியுடன் காஜா சரியாக பேசவில்லை எனவும் கூறப்படுகிறது. இதில் கலக்கம் அடைந்த புவனேஸ்வரி, தற்கொலை செய்துகொள்ள போவதாக முடிவு செய்து காஜாமொய்தீனின் செல்ஃபோன் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

இதை பார்த்த காஜாமொய்தீன் தொழிற்பேட்டையில் உள்ள வீட்டில் சென்று பார்த்தபோது, புவனேஸ்வரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிழக்கு காவல் நிலைய போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து முகநூல் நண்பர் காஜா மொய்தீன், புவனேஸ்வரியை தற்கொலைக்கு தூண்டினாரா? இல்லை புவனேஸ்வரியே தற்கொலை செய்துகொண்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Coimbatore pollachi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe