Skip to main content

திருமணத்தை மீறிய உறவால் விபரீதம்; பெண் கழுத்தை நெரித்துக் கொலை!

Published on 20/03/2023 | Edited on 20/03/2023

 

woman passed away salem

 

சேலத்தில் தாலி கட்டாமல் சேர்ந்து வாழ்ந்து வந்த பெண்ணுக்கு வேறு ஒரு ஆணுடன் தொடர்பு இருந்ததால், ஆத்திரத்தில் ஆட்டோ ஓட்டுநர் பெண்ணை துண்டால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.    

 

சேலம் தாதகாப்பட்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன் (48). ஆட்டோ ஓட்டுநர். இவருடைய மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர் சேலம் ஜவுளிக்கடை பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள ஒரு தனியார் டைல்ஸ் நிறுவனத்தில் வேலை செய்தபோது, அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த ஷெகனாஸ் (48) என்பவருடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்தார். ஒரு கட்டத்தில் மனைவி, குழந்தைகளை மறந்த மாதேஸ்வரன் ஷெகனாஸுடன் தனியாக ஒரு வீட்டில் முறைப்படி திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழத் தொடங்கினார்.

 

ஷெகனாஸுக்கு ஏற்கனவே திருமணமாகி கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். அந்த நிலையில்தான் மாதேஸ்வரனுடன் பழக்கம் ஏற்பட்டு அவர்களுக்குள் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. ஷெகனாஸுக்கு முதல் கணவர் மூலம் பிறந்த மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. இது ஒருபுறம் இருக்க, ஷெகனாஸுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. இதையறிந்த மாதேஸ்வரன் அவரை கண்டித்துள்ளார். ஆனாலும் ஷெகனாஸ் அந்த இளைஞருடன் உறவைத் தொடர்ந்து வந்தார்.     

 

இதையடுத்து மார்ச் 18ம் தேதி ஷெகனாஸ் வீட்டுக்குச் சென்ற மாதேஸ்வரன் அவரை மீண்டும் கண்டித்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற மாதேஸ்வரன் ஷெகனாஸின் கழுத்தை துண்டால் நெரித்துக் கொலை செய்தார். இதையடுத்து அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அக்கம்பக்கத்தினர் மூலம் தகவல் அறிந்த அன்னதானப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்தனர். சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாதேஸ்வரனை தேடி வந்த நிலையில், அவரே காவல்நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.