Skip to main content

காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்த காதலி சரமாரியாக வெட்டி கொலை! காதலன் தலைமறைவு

Published on 12/07/2018 | Edited on 12/07/2018

வேலூர் மாவட்டம், இராணிப்பேட்டை நகர காவல்நிலையம் எதிரே புதன்கிழமை மாலை 5 மணியளவில் பரபரப்பாக இருந்தது. காவல்நிலையம் எதிரே நடந்து வந்துக்கொண்டுயிருந்த 45 வயது மதிக்கதக்க ஒரு பெண்மணியை, இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் சரமாரியாக வெட்டிவிட்டு தான் வந்த இருசக்கர வாகனத்திலேயே தப்பிவிட்டார். பட்டபகலில் சாலையில், காவல்நிலையம் எதிரே பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்த கொலை மக்களை அதிர்ச்சியடைய வைத்துவிட்டது.

 

 

 

பொதுமக்கள் அந்தயிடத்தில் கூடி உயிர் உள்ளதாக பார்த்தனர். துடிதுடித்து அவர் உயிர் பிரிவதை பொதுமக்கள் பார்த்து அதிர்ந்தனர். அந்த நேரத்தில் மழை பெய்ததால் ரத்தம் மழைநீரில் கரைந்து அந்த பகுதியே சிவப்பாக மாறியது. 
 

இராணிப்பேட்டை போலீசார் மற்றும் ராணிப்பேட்டை டி.எஸ்.பி. கலைச்செல்வன் சம்பவயிடத்துக்கு வந்து உடனே சம்பவயிடத்துக்கு வந்து கொலை செய்யப்பட்டது யார்?. கொலை செய்தது யார்? என விசாரணை நடத்தியபோது, இராணிப்பேட்டை அடுத்த செங்காடு பகுதியை சேர்ந்தவர் சுகுணா. இவரது கணவர் இறந்துவிட்டார், தனக்கு ஆண் துணை வேண்டும்மென வாங்கூர் கிராமத்தை சேர்ந்த சுரேந்திரனுடன் பழக்கம் ஏற்பட்டு அங்கீகரிக்கப்படாத கணவன் - மனைவியாக வாழ்ந்துவந்துள்ளனர்.  


 

Woman killed and killed as a lady who complained to police station!

 

Woman killed and killed as a lady who complained to police station!


 

ஜீலை 10ந் தேதி சுரேந்திரன், சுகுணாவிடம் குடிப்பதற்கு 1000 ரூபாய் கேட்டு உள்ளார். சுகுணா கொடுக்க மறுத்ததால் இருவருக்கும் சண்டை வந்து வாய் சண்டை அடிதடியாகியுள்ளது. சுகணாவை செங்கல் கொண்டு தாக்கி உள்ளார் சுரேந்திரன். அதனை தொடர்ந்து ஜீலை 11ந் தேதி சுகுணா ராணிப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் சுரேந்தர் மீது புகார் கொடுக்க வந்துள்ளார்.
 

 

 

இதனை அறிந்த சுரேந்திரன் இருசக்கர வாகனத்தில் வந்து காவல் நிலைய எதிரே சுகுணாவை கத்தியை கொண்டு சரமாறியாக வெட்டி கொலை செய்துவிட்டு சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இறந்த சுகுணாவின் சடலத்தை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. இது குறித்து ராணிப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

குஜராத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
worth Rs.300 crore seized in Gujarat

குஜராத் மாநிலம் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குஜராத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குஜராத்தின் அகமதாபாத்தில் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர். அப்போது அங்கு இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இதன் மதிப்பு சுமார் ரூ.300 கோடி எனப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர். 7 பேர் கைதான நிலையில், போதைப் பொருள் தயாரிப்புக் கும்பல் தலைவனின் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் என்றும் கூறப்படுகிறது.

நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.300 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக குஜராத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி படகு ஒன்றில் இருந்து 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 300 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும், இதே போன்று கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி  சுமார் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.