Skip to main content

கூட்டுப் பாலியல் வன்கொடுமை; முகத்தில் சிறுநீர் கழித்தும் ஆபாச வீடியோ எடுத்தும் சித்திரவதை!

Published on 03/02/2023 | Edited on 03/02/2023

 

 woman has filed a police complaint against three people Dharmapuri

 

தர்மபுரி அருகே, பெண் கட்டடத் தொழிலாளி ஒருவரை மூன்று பேர் சேர்ந்து இரண்டு ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.    

 

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள வண்ணாத்திப்பட்டியைச் சேர்ந்த 34 வயது பெண் ஒருவர் கட்டடத் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் தர்மபுரி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். 

 

புகார் குறித்து அந்தப் பெண் கூறியது:  எனக்குத் திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக நானும் என் கணவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறோம். குழந்தைகள் கணவருடன் வசிக்கின்றனர். நான் கட்டட வேலைக்குச் சென்று பிழைத்து வருகிறேன். பென்னாகரம் ரங்காபுரம் காட்டுக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் கட்டட மேஸ்திரி முருகன்.  இவருடன் கட்டட வேலைக்குச் சென்று வந்ததில் எங்களுக்குள் நல்ல நட்பு ஏற்பட்டது. இதைப் பயன்படுத்திக் கொண்ட அவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக என்னை கட்டாயப்படுத்தி  பலமுறை பாலியல் பாலத்காரம் செய்துள்ளார்.  பென்னாகரம், மாங்கரை, மோட்டுப்பட்டி, குட்டம்பட்டி, வண்ணாத்திப்பட்டி, கரியம்பட்டி, காட்டுக்கொல்லை ஆகிய இடங்களுக்கு  முருகனுடன் கட்டட வேலைக்குச் சென்ற போதெல்லாம் 150க்கும் மேற்பட்ட முறை என்ன பலவந்தப்படுத்தி உறவு கொண்டுள்ளார். அவர் எனக்குத் தெரியாமல் அலைபேசியில் என்னை ஆபாசமாக வீடியோ படம் எடுத்து வைத்துக் கொண்டார். அதன்பிறகு, அந்த வீடியோவை  சமூக ஊடகங்களில் பரப்பி விடுவேன் என்று மிரட்டி மிரட்டியே என்னை மேலும் சீரழித்தார்.  

 

இதுமட்டுமின்றி அவ்வப்போது பணமும் கேட்டு மிரட்டி வந்தார். இதனால் வேறு வழியின்றி நான், எனக்குத் தெரிந்த பலரிடம் கடன் வாங்கி இதுவரை முருகனிடம் 3 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறேன். நான் ஆடையில்லாமல் இருப்பது போன்ற 15க்கும் மேற்பட்ட வீடியோக்களை எடுத்து வைத்திருக்கிறார்.  முருகன் மட்டுமின்றி, அவருடைய கூட்டாளியான மேஸ்திரி காளியப்பன், மேஸ்திரி கணேசன் ஆகியோரும் என்னை மிரட்டி பலமுறை  பாலியல் வன்கொடுமை செய்தனர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு இவர்கள் மூன்று பேரும் இரவு நேரத்தில் என் வீட்டிற்குள் புகுந்து என்னை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். அப்போது குடிபோதையில் இருந்த அவர்கள் என் கை, கால்களை கட்டிப்போட்டும் வாயை துணியால் அடைத்து வைத்தும் சித்திரவதை செய்தனர். அவர்கள் என் மீது சிறுநீர் கழித்தனர். இதையெல்லாம் வெளியே யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டினர். நானும் உயிருக்குப் பயந்து யாரிடமும் புகார் அளிக்கவில்லை.     

 

இவர்களின் கொடுமை தாங்க முடியாததால் வண்ணாத்திப்பட்டியில் இருந்து வீட்டை காலி செய்துவிட்டு, மாரண்டஅள்ளிக்குச் சென்றுவிட்டேன். இவர்களுக்கு மாதேஸ் என்பவர் உடந்தையாக இருக்கிறார். எனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து ஏற்கனவே பென்னாகரம் காவல்நிலையத்தில் புகார் அளித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்னிடம் மட்டும் விசாரித்துவிட்டு புகாரை கிடப்பில் போட்டுவிட்டனர். என்னிடம் விசாரணை நடத்திய காவலர்களில் ஒருவர், நீ அழகாகத்தானே இருக்கிறாய்... தினமும் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாமே என அருவருக்கத்தக்க வகையில் பேசினார். அந்தக் காவலர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் கூறினார். இந்தப் புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்டுப்பாலியல் விவகாரம் மாரண்டஅள்ளி பகுதியில் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.