ADVERTISEMENT

பெண்ணின் கைகளை கட்டி தலைமுடியை அறுத்த கொடூரம்!

04:00 PM May 24, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பெண் ஒருவரின் கைகளைக் கட்டி வீட்டுக்கு அழைத்துச் சென்ற கஞ்சா போதை ஆசாமி, அந்த பெண்ணின் தலைமுடியைக் கத்தியால் அறுத்து கொடுமைப்படுத்தும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

பெண் ஒருவரின் கைகளைக் கட்டி அழைத்து வந்த போதை ஆசாமி ஒருவர், அந்த பெண்ணின் தலைமுடியை முதலில் கத்திரிக்கோலால் வெட்டியுள்ளார். அந்த கத்தரிக்கோல் கத்தரிக்காமல் அவரை சோதிக்க, ஆத்திரமடைந்த அந்த போதை ஆசாமி, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து, 'புள்ள மனசுல ஆசையை உண்டாக்கி, எத்தனை பேர வீணாக்கி இருக்க' எனக் கேட்ட படியே, அந்த பெண்ணின் தலைமுடியைக் கொத்தாகப் பிடித்து, ஆவேசமாக அறுக்கத் தொடங்கினார்.

ஆபாசமாகத் திட்டிய படியே, அந்த பெண்ணின் தலைமுடியைக் கொத்தாக அறுத்து வீசினார். இது தொடர்பான, வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் இரண்டு பேருக்கு இடையே காத்து வாக்குல இரண்டுக்கும் மேற்பட்ட காதல் மலர்ந்ததால், நிகழ்ந்த சம்பவம், வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பெண்ணின் தலைமுடியைக் கத்தியால் அறுக்கும் ஆசாமியின் பெயர் கார்த்திக் என்பது தெரியவந்தது. பாதிக்கப்பட்ட பெண் தனது இரண்டாவது கணவரான கார்த்திக்கை பிரிந்து மூன்றாவது ஒருவருடன் வீட்டை விட்டுச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே, முதல் மனைவியை பிரிந்து, இந்த பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து குடித்தனம் நடத்தி வந்த கார்த்திக்கு ஆத்திரத்தை உண்டாக்கி உள்ளது.

இதையடுத்து, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, அந்த பெண்ணை தேடிக் கண்டுபிடித்த கார்த்திக், அந்த பெண்ணின் கைகளை கட்டி வீட்டிற்கு அழைத்து வந்து ஆசைக் காட்டி தன்னை போல நிறைய பேரின் வாழ்க்கையைக் கெடுத்ததாக குற்றம்சாட்டி, அதற்கு பழி வாங்குவதாகக் கூறி, தலைமுடியை அறுத்து விபரீத செயலில் ஈடுபட்டுள்ளார்.

தலைமுடியை அறுத்த கார்த்திக் உள்ளிட்டோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT