Skip to main content

கோவிலுக்கு வரவழைத்து சில்மிஷம்: இந்து அமைப்பு நிா்வாகி மீது பெண் புகாா்.

Published on 29/08/2021 | Edited on 30/08/2021

 

pic_3.jpg

 

சில தினங்களுக்கு முன் பாஜக மாநிலச் செயலாளா் கே.டி. ராகவன், பெண் நிா்வாகி ஒருவருடன் பாலியல் இச்சையில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதுடன், அவரை ராஜினாமா செய்ய வைத்து பாஜகவினரையும் தலைகுனிய வைத்தது. வீடியோ வெளியிட்ட ஊடகவியலாளர் மதனும்  அதற்கு துணையாக இருந்த ஒரு பெண்ணும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

 

இந்த நிலையில்தான், குமாி மாவட்டத்தில் உள்ள இந்து அமைப்பு ஒன்றின் மாவட்ட நிா்வாகியாக இருக்கும், குளச்சல் அருகே குளவிளை பிலாங்கரை காலணியைச் சோ்ந்த ராஜேஷ்வரன், அங்கு கோவில் ஒன்று நடத்திவருகிறாா். அவர், அந்தக் கோவிலுக்கு வரும் பெண்களின் தோஷம், நோய், குடும்ப கஷ்டத்தை தீா்ப்பதாக கூறி பாலியல் ரீதியான சில்மிஷத்தில் ஈடுபடுவதாக செட்டியாா்மடத்தைச் சோ்ந்த ஜெகதீஸ்வாி என்ற பெண் மாவட்டக் காவல் கண்காணிப்பாளாிடம் புகாா் கொடுத்துள்ளாா்.

 

இதுகுறித்து ஜெகதீஸ்வாி கூறும்போது, “எனது கணவா் உடல்நலமின்றி இறந்துவிட்ட நிலையில், எனது மகனுக்கும் உடல்நிலை சாியில்லாமல் ஆனது. இதையடுத்து, ராஜேஷ்வரன் நடத்தும் கோவிலுக்குச் சென்றேன். கோவிலில் சில நாட்கள் தங்கும்படி என்னிடம் ராஜேஷ்வரன் கூறியதால் நானும் மகனும் கோவிலில் தங்கினோம். அப்போது ராஜேஷ்வரன் ஆசை வாா்த்தை கூறி என்னிடம் தவறாக நடந்துகொண்டார். அதன்பிறகு தனியாக வீடு வாடகை எடுத்து என்னுடன் குடும்பம் நடத்திவந்தாா்.

 

இந்நிலையில், அவரது நடவடிக்கையில் சந்தேகம் வரவே அவருடைய செல்ஃபோனைப் பாிசோதனை செய்ததில், அவா் என்னைப் போல் கோவிலுக்கு வந்த 15க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் சில்மிஷம் செய்து, அதை செல்ஃபோனிலும் பதிவுசெய்து வைத்திருந்தாா். மேலும், அதைக் காட்டி அந்தப் பெண்களிடம் நகை மற்றும் பணத்தைப் பறிப்பதும் தொியவந்தது. இது சம்மந்தமாக இரணியல் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தும், அவா் சாா்ந்திருக்கும் அமைப்பைக் காரணம் காட்டி போலீசாா் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால்தான் மாவட்டக் காவல் கண்காணிப்பாளாிடம் புகாா் கொடுத்தேன்” என்றாா்.

 

இது சம்மந்தமாக நாம் ராஜேஷ்வரனிடம் கேட்டபோது, “அது எனது உறவுகார பெண்தான். அவள் சொல்வது எல்லாமே பொய். அவள் ஏதோ திட்டமிட்டுத்தான் என்மீது அவதூறு பரப்புகிறாா்” என முடித்துக்கொண்டாா். இந்த விவகாரம் குளச்சல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பிரதமர் சொன்னால் அவரிடமே செல்லுங்கள்' - செவிட்டில் விட்ட உச்சநீதிமன்றம் 

Published on 08/11/2023 | Edited on 08/11/2023

 

nn

 

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசின் திட்டத்திற்கும், நியமனத்திற்கும் எதிராகப் பல்வேறு அமைப்புகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதற்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளையும் சேர்த்து உச்சநீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

 

இன்று உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது ஆஜரான தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், ‘எதற்காக அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றுகிறீர்கள்’ எனத் தமிழக அரசு சார்பில் கண்டனம் தெரிவித்தார். ‘ஆகம விதிப்படி பயிற்சி பெற்றவர்கள் ஆகம விதியைப் பின்பற்றும் கோவில்களில் நியமிக்கப்படுகிறார்கள்’ எனத் தமிழக அரசு பதிலளித்தது. தொடர்ந்து  இது தமிழ்நாட்டைச் சேர்ந்த விவகாரம் என்பதால் சென்னை உயர்நீதிமன்றமே விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

 

அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கை தொடர்ந்த ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சங்க மனுதாரர் தரப்பு, 'தமிழ்நாட்டில் கோயில்களை மாநில அரசே கைப்பற்றி வருவதாக பிரதமர் கூறியுள்ளார்' எனத் தெரிவித்தனர். அதனைக் கேட்ட நீதிபதிகள், 'தமிழ்நாட்டில் கோயில்களை அரசு கைப்பற்றி வருவதாக பிரதமர் சொன்னால் பிரதமரிடமே செல்லுங்கள்' என கண்டனம் தெரிவித்ததோடு, அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடரும். அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கும் தமிழ்நாடு அரசின் ஆணைக்கு தடை விதிக்க முடியாது என மறுப்பு தெரிவித்து, வழக்கின் அடுத்த விசாரணையை ஜனவரி 25 ஆம் தேதி நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

 

 

Next Story

கோயில் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு

Published on 20/09/2023 | Edited on 20/09/2023

 

Increase in pension for temple workers

 

2023 - 2024 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் சட்டமன்ற அறிவிப்பில்  துறைநிலையிலான ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வுபெறும் கோயில் பணியாளர்களின் நலன் கருதி அவர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.4, ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற்று வந்த பணியாளர் இறந்துவிட்டால் அவரின் வாரிசுதாரருக்கு மாதந்தோறும் ஆயிரத்து 500 ரூபாய் குடும்ப மாத ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு முதல் குடும்ப ஓய்வூதியம் ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த அறிவிப்புகளை செயல்படுத்திடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துறை நிலையிலான ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற திருக்கோயில் பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியத் தொகையான ரூ.4 ஆயிரம் மற்றும் உயர்த்தப்பட்ட குடும்ப ஓய்வூதியத் ஓய்வுபெற்ற தொகையான ரூ.2 ஆயிரம் ஆகியவற்றிற்கான காசோலைகளை கோயில் பணியாளர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு வழங்கினார். இதன்மூலம் ஆண்டொன்றுக்கு 2 ஆயிரத்து 454 ஓய்வூதியதாரர்களும், 304 குடும்ப ஓய்வூதியதாரர்களும் பயன்பெற உள்ளனர்.

 

இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் க.மணிவாசன், இந்து சமய செயலாளர், அறநிலையத்துறை ஆணையாளர் க.வீ.முரளீதரன், கூடுதல் ஆணையர் அ.சங்கர் என பலரும் கலந்து கொண்டனர்.