Skip to main content

பெண் தொழிலதிபரிடம் ரூ. 36 லட்சம் மோசடி! வழக்கறிஞர் உட்பட இருவர் மீது வழக்கு!!

Published on 15/07/2022 | Edited on 15/07/2022

 

A woman entrepreneur victim fraud case against two including the lawyer!!
குரு இராதாகிருஷ்ணன்

 

நீதிமன்றத்தை ஏமாற்றி போலி ஆவணம் மூலம் வழக்கை வாபஸ் பெற்ற வழக்கறிஞர் உள்பட இருவர் மீது மாவட்டக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

மதுரை பைபாஸ் ரோட்டைச் சேர்ந்த தொழிலதிபர் அன்பரசி. இவருக்கு மதுரையைச் சேர்ந்த முரளி, குணசேகரன், சரவணன் ஆகிய மூன்று பேர் நிலத்தை ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில் பெறுவதற்காக கடந்த 1999ஆம் ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் தேதி கிரைய உடன்படிக்கை ஏற்பட்டது. அதன் பின் நில உரிமையாளர்கள் மூவரும் நிலத்தை வேறு நபருக்கு திடீரென விற்றுவிட்டனர். 

 

இதனால் அன்பரசி, பணத்தை திருப்பித் தர வலியுறுத்தி மதுரை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனடிப்படையில் நீதிமன்றமும் ரூ. 28 லட்சத்து 66 ஆயிரத்து 660 ரூபாயை மற்றும் அந்தப் பணத்திற்கான 6 சதவீத வட்டியுடன் வழங்க உத்தரவிட்டது. அப்படி இருந்தும் பணம் தராததால் உத்தமபாளையத்தில் உள்ள பங்குதாரர்களின் சொத்துக்கள் மீது நடவடிக்கை எடுக்க அன்பரசி தேனி மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதனால் பங்குதாரர்கள் பல்வேறு தவணைகளில் நீதிமன்றத்தில் 44.75 லட்சத்தை திருப்பி செலுத்தினார்கள். 

 

அதேசமயம், இந்த விவகாரம் குறித்து தொழிலதிபர் அன்பரசியின் கணவர் பாக்கியராஜ், தனது நண்பர் திண்டுக்கல்லில் உள்ள ஆடிட்டர்(CA) சீனிவாசனிடம் தெரிவித்துள்ளார். அவரின் ஏற்பாட்டின் பெயரில், இந்த வழக்கை நடத்த தேனியைச் சேர்ந்த வழக்கறிஞரான குரு இராதாகிருஷ்ணனை (ஓ.பி.எஸ்.சின் உறவினர். கடந்த அதிமுக ஆட்சியின்போது அரசு வழக்கறிஞராகவும் இருந்திருக்கிறார்)  நியமித்துள்ளனர்.

 

A woman entrepreneur victim fraud case against two including the lawyer!!
ஆடிட்டர் சீனிவாசன்

 

ஆனால், 44.75 லட்சத்தை முரளி, சரவணன் மற்றும் குணசேகரன் ஆகியோரிடம் இருந்து அன்பரசி பெற்றுக்கொண்டதாக போலி ஆணவத்தை தயார் செய்து அதில் அன்பரசியின் கையெழுத்தை போட்டு அந்தப் போலி ஆவணத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து வழக்கை வாபஸ் பெற்றனர். 

 

இந்த மோசடி விவகாரத்தை அறிந்த அன்பரசி, ஆடிட்டர் சீனிவாசன், வழக்கறிஞர் குரு இராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் தனக்கு வரவேண்டிய பணத்தை கேட்டுள்ளார். அப்போது இவர்கள், ரூ.8.50 லட்சத்தை மட்டும் அன்பரசியிடம் கொடுத்துள்ளனர். மேலும் மீதி பணம் 36.25 லட்சத்தை கொடுக்காமல் தொடர்ந்து இழுத்தடித்து வந்துள்ளனர். அதுமட்டுமின்றி அன்பரசிக்கு கொலை மிரட்டலும் விடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது. 

 

இதனால் அன்பரசி, தனது பணத்தை மீட்டுத் தரக்கோரி திண்டுக்கல் தேனி சரக டி.ஐ.ஜி.யாக இருந்த விஜயக்குமாரியிடம் கடந்த 29.9.2021 அன்று புகார் மனு கொடுத்தார். அதைத் தொடர்ந்து தேனி மாவட்டக் குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுக்க டி.ஐ.ஜி. பரிந்துரையும் செய்திருந்தார். ஆனால், தேனி மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினர் அன்பரசி புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளனர். 

 

இதனால் அன்பரசி, தேனி மாஜிஸ்த்ரேட் நீதிமன்றத்தில் பணத்தை மீட்டு தரக்கோரி மனு கொடுத்தார். இந்த மனுவை விசாரித்த தேனி மாஜிஸ்த்ரேட் நீதிமன்றம், ஆடிட்டர் சீனிவாசன் மற்றும் வழக்கறிஞர் குரு இராதாகிருஷ்ணன் மீது மோசடி மற்றும் கொலை மிரட்டல் உள்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய தேனி மாவட்டக் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சீமைராஜ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் உமாதேவி ஆகியோருக்கு உத்தரவிட்டது. அதனடிப்படையில் ஆடிட்டர் சீனிவாசன் மற்றும் வழக்கறிஞர் குரு இராதாகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்து அது தொடர்பான விசாரணை நடைபெற்றுவருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எல்லாருமே திருடங்கதான்... சொல்லப் போனா...' - பாடலுக்கு நடனமாடியபடி வந்த சுயேச்சை வேட்பாளர்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Independent candidate danced to the song 'ellarume Thirudangathan... sollpona...'

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் இன்று மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. நேற்று முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் முதல் சுயேச்சை வேட்பாளர்கள் எனப் பலர் இறுதி நாள் என்பதால் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சிலர் நூதன முறைகளில் வந்து வேட்புமனு தாக்கல் செய்வது முன்னரே பல தேர்தல்களில் நடந்துள்ளது.

தேர்தல் நேரங்களில் இதுபோன்ற நூதன சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திண்டுக்கல்லில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 'எல்லாருமே திருடங்கதான் சொல்லப்போனால் குருடங்கதான்' என்ற பாடலை ஒலிக்கவிட்டபடி சாலையில் நடனமாடிக்கொண்டே வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

காற்றில் பறக்கும் தேர்தல் விதிமுறை-நிலக்கோட்டையில் அதிகாரிகளின் மெத்தனம்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Is there an election? Or not?- Complacency of authorities in Nilakottai

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று பிற்பகல் நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வரும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை தொகுதியில் தேர்தல் நடைமுறைகள் அமல்படுத்துவதில் அரசு அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

நிலக்கோட்டை பேருந்து நிலையம் அருகே நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியின் அலுவலகம் உள்ளது. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நேற்று தேர்தல் தேதி அறிவித்தும் கூட இதுவரை சீல் வைக்கப்படவில்லை. எம்.எல்.ஏ தேன்மொழி ஆதரவாளர்கள் வழக்கம்போல்  சட்டமன்ற அலுவலகத்தை பூட்டிச் சென்ற பூட்டு மட்டுமே அங்கு காட்சிப் பொருளாக தொங்குகின்றதே தவிர தேர்தல் விதி முறைகளின்படி அந்த அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைக்காமல் மெத்தனப் போக்கை கடைபிடித்து வருகிறார்கள்.

இதே போல் தொகுதி முழுவதும் கொடிக் கம்பங்கள் அகற்றப்படவில்லை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைவரும் சாலையில் வைத்துள்ள பேனர்கள் அப்படியே இருக்கிறது. தொகுதியில் தேர்தல் நடக்கிறதா? இல்லையா? என பொதுமக்கள் கேட்கும் அளவிற்கு அதிகாரிகளின் செயல்பாடு மெத்தனமாக உள்ளதாகக் குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.