Skip to main content

உழவர் பாதுகாப்பு திட்டத்தில் கோடிக்கணக்கில் மோசடி; பெண் ஊழியர் கைது         

Published on 02/09/2023 | Edited on 02/09/2023

 

woman employee who defrauded   Farmers' Protection Scheme of crore Arrest
அகிலா

 

திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒரு பிரிவாக இயங்கி வருகிறது சமூக நலத்துறை வட்டாட்சியர் அலுவலகம். இந்த அலுவலகத்தில் கணினி ஆபரேட்டராக 2012 ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்கு மேலாக தற்காலிக பணியாளராக வேலை செய்து வந்துள்ளார் அதே ஊரைச் சேர்ந்த அகிலா. இவர் சுமார் ரூ. 6.75 கோடி பணத்தை கணினி மூலம் மோசடி செய்து அவரது கணவர் வினோத், தாயார் விஜயா, சித்தப்பா மணிவண்ணன், உறவினர்கள் பாலகிருஷ்ணன் உட்பட சுமார் ஏழு பேர் வங்கி கணக்குகளுக்கு பணப்பரிமாற்றம் செய்துள்ளதாக கண்டறியப்பட்டு அகிலா உட்பட ஐந்து பேர் கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இதுகுறித்து விசாரித்த போது திட்டக்குடி வட்டம் எறையூர் கிராமத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி என்பவர் மனைவி பத்மினி மற்றும் பெண்ணாடத்தை சேர்ந்த மணி என்பவரது மனைவி தேவகி, இவர்கள் அவரவரின் கணவர் இறந்து போனதால் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இயற்கை மரணத்திற்கான நிவாரணத் தொகை வழங்குமாறு விண்ணப்பித்திருந்தனர். இவர்களது விண்ணப்பம் சுமார் ஆறு மாதத்திற்கு மேல் ஆகியும் அவர்களது விண்ணப்பங்கள் முறையாக பரிசீலனை செய்து நிவாரணம் வழங்கப்படவில்லை. இது குறித்து அந்தப் பெண்கள் இருவரும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க, அது குறித்து மாவட்ட ஆட்சியர் கடலூர் கோட்டாட்சியர் கவியரசு அவர்களை விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டிருந்தார்.

 

இதையடுத்து கடலூர் கோட்டாட்சியர் தலைமையில் நடத்தப்பட்ட விசாரணையில் மேற்படி இரண்டு பெண்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. இருந்தும் பத்மினி மற்றும் தேவகி ஆகியோரின் ஆதார் எண் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்தனர். அதில் மேற்படி இரு நபர்களும் நான்கு மாதங்களுக்கு முன்னரே அவர்களுக்கான உதவித்தொகை அனுப்பப்பட்டுள்ளது என்று பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும் இது குறித்து கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் உழவர் பாதுகாப்பு திட்டத்திற்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்ட பட்டியல்களையும் ஆராய்ந்து பார்த்தனர், கடலூர் மாவட்ட கருவூல அலுவலர்களிடம் இருந்து பெறப்பட்ட ஆவணங்களையும் பரிசீலனை செய்ததில் விண்ணப்பதாரர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை அவர்களுக்கு வழங்க வேண்டிய உதவித்தொகைகளை பயனாளிகள் அல்லாத வேறு நபர்களின் வங்கிக் கணக்கிற்கு  நிவாரணத் தொகை அனுப்பப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

 

woman employee who defrauded   Farmers' Protection Scheme of crore Arrest

 

இது குறித்து விசாரணை நடத்தியதில் கணினி ஆபரேட்டர் அகிலா பயனாளிகளுக்கு அரசால் வழங்கப்படும் தொகையில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது போக மீதி இருக்கும் தொகைகளை அவரது வங்கி கணக்கு மற்றும் அவர் தாய் கணவர் சித்தப்பா மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட ஏழு பேர் வங்கி கணக்குகளுக்கு அந்த பணத்தை அனுப்பி மோசடி செய்துள்ளார். மேலும் அவ்வப்போது முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு மாதந்தோறும் வங்கிக்கு அனுப்பப்படும் உதவித்தொகை பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் பெயருக்கு பணம் அனுப்பாமல் அந்தப் பணத்தை தனக்கு வேண்டப்பட்டவர்கள் வங்கிக் கணக்கிற்கு அவ்வப்போது அனுப்பி சுமார் 6 கோடியே 75 லட்ச ரூபாய் மோசடி செய்துள்ளார். 

 

கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பணப்பரிவர்த்தனையில் அகிலா மோசடி செய்துள்ளார் என்பதும், மேலும் இதில் உழவர் பாதுகாப்பு திட்டம் முதியோர் உதவித்தொகை ஆகிய பட்டியல்களை ஆய்வு செய்வதில் மேற்படி நபர்களின் வங்கிக் கணக்கிற்கு அகிலா மூலம் பணப்பரிமாற்றம் செய்வது உறுதியாக கண்டறியப்பட்டது. இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மோசடியில் சம்பந்தப்பட்ட அகிலா, அவர் தாயார் விஜயா, சித்தப்பா மணிவண்ணன் மற்றும் கணவர் வினோத் குமார் உறவினர்கள் செல்வராஜ், வளர்மதி, முத்துசாமி, விஜயன் ஆகியோர் பெயருக்கு பல வங்கிகளில் அந்த வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 

 

இதையடுத்து, கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றிய அகிலாவை கைது செய்து அழைத்து சென்றனர். மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அகிலாவின் குடும்பத்தினரையும் விசாரணைக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் திட்டக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.