திருமணம் செய்து ஏமாற்றியதாக பெண் அளித்த புகாரை தொடர்ந்து மதுக்கரை சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவிட்டார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
கோவை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் முத்துக்குமார் (வயது 40), இவர் மீது தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அனுசுயா என்கிற பெண் கடந்த 2018-ம் ஆண்டு ஒரு புகார் மனு அளித்தார். அதில் சப்- இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தன்னை இரண்டாவது திருமணம் செய்தார் மேலும் என்னிடமிருந்து ரூபாய் ஓரு லட்சத்து 78 ஆயிரம் மற்றும் 18 பவுன் நகை பெற்றுக் கொண்டார். அதன் பின்னர் என்னை ஏமாற்றிவிட்டார்.
மேலும் நான் கொடுத்த பணம் மற்றும் நகையை திருப்பி தரவில்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இதையடுத்து மதுக்கரை சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமாரை பணி இடைநீக்கம் செய்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவிட்டார்.
மேலும் நான் கொடுத்த பணம் மற்றும் நகையை திருப்பி தரவில்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இதையடுத்து மதுக்கரை சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமாரை பணி இடைநீக்கம் செய்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவிட்டார்.
Show comments