Skip to main content

நல்லவன்னு நினைச்சேன்... இப்படி பண்ணிட்டான் சார்... பெண் கண்ணீர் புகார்: மோசடி நபர் கைது

Published on 17/08/2018 | Edited on 17/08/2018
Woman complained


சென்னை நந்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் 34 வயது பெண் கலைவாணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் நந்தம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். அப்போது அவர் போலீசாரிடம் சில விசயங்களையும் கூறியுள்ளார். பேஸ்புக்கில் அக்கவுண்ட் வைத்திருந்த தான், பலருடன் நட்பு வைத்திருந்ததாகவும், அந்த வகையில் மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்த சசிகாந்த் சிவாஜி(வயது 38) என்பவருடன் முகநூல் மூலம் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் இந்த நட்பு காதலாக மாறியது. கடந்த 2½ ஆண்டுகளாக பேஸ்புக் மூலம் காதலித்துள்ளார்.

 

 


இருவரும் திருமணம் செய்துகொள்வதாக முடிவு எடுக்கின்றனர். இதனால் நேரில் சந்திக்க வேண்டும் என்பதால் கோவாவில் சந்தித்துள்ளனர். அப்போது ஆசை வார்த்தை கூறி, தனத ஆசைக்கு இணங்க வைத்திருக்கிறார் சசிகாந்த் சிவாஜி. அதன் பின்னரும் பலமுறை பல்வேறு இடங்களில் இருவரும் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. 
 

பின்னர் சசிகாந்த் சிவாஜி, தனியாக தொழில் தொடங்கினால் திருமணத்திற்கு பிறகு இரண்டு பேர் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும் எனவே அதற்கு 10 லட்சம் தேவைப்படும் என்று ஆசை வார்த்தை பேசி, கலைவாணியிடம் 10 லட்சத்தை பெற்றுள்ளார். பணம் பெற்றுக்கொண்டு சென்ற சசிகாந்த் சிவாஜி, அதன் பின்னர் கலைவாணியை தொடர்புகொள்ளவே இல்லை. பேஸ்புக் தொடர்பையும் துண்டித்துவிட்டார். கோவா உள்ளிட்ட இடங்களில் இருவரும் தனியாக இருந்தபோது, சசிகாந்த் சிவாஜியின் பர்ஸ், பேக் உள்ளிட்டவற்றில் இருந்த முகவரிகளை சேகரித்து வைத்திருந்தார் கலைவாணி. அந்த முகவரிக்கு சென்று விசாரிக்கலாம் என்று கலைவாணி புனேவுக்கு சென்று சசிகாந்த் சிவாஜி பற்றி விசாரித்துள்ளார். 
 

 

 

அங்குதான் கலைவாணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது. சசிகாந்த் சிவாஜிக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்டதும், தன்னிடம் இருந்து ரூ.10 லட்சத்தை வாங்கி சசிகாந்த் சிவாஜி மோசடி செய்துவிட்டதும் தெரிந்து மிகப்பெரிய மனஉளைச்சலுக்கு ஆளானார்.

பின்னர் சென்னை திரும்பிய கையோடு, நந்தம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். நல்லவர் போல்தான் பழகினான். அதனால்தான் காதலித்தேன். இப்படி நாசம் பண்ணுவான்னு நான் கனவில் கூட நினைக்கவில்லை. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீருடன் புகார் அளித்தார். புகாரின் பேரில் தென்சென்னை போலீஸ் இணை கமிஷனர் மகேஸ்வரி, பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி ஆகியோர் உத்தரவின்பேரில் பரங்கிமலை போலீஸ் உதவி கமிஷனர் மோகன்தாஸ் தலைமையில் நந்தம்பாக்கம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம், ஏட்டுகள் பாலாஜி, அல்போனஸ், மகேஸ்வரன், தினகரன் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
 

தனிப்படையினர் புனேவுக்கு சென்று சசிகாந்த் சிவாஜியை கைது செய்தனர். சென்னைக்கு அழைத்து வரப்பட்ட அவரிம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.  இதுபோன்று சமூகவலைத்தளம் மூலம் வேறு பெண்களுடன் பழகி மோசடி செய்துள்ளாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் திடீர் மரணம்; கணவர் பரபரப்பு புகார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Family planning woman passed away suddenly

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள கோடேபாளையத்தைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (30). இவரது மனைவி துர்கா (27). கடந்த 2018ல் இருவருக்கும் திருமணமானது. இவர்களுக்கு நான்கரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், 2-வது பிரசவத்துக்காக கடந்த 20ம் தேதி துர்காவை புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அன்றைய தினம் மதியம் சுக பிரசவத்தில் குழந்தை பிறந்தது. அவரது குடும்பத்தினர் அருகில் இருந்து கவனித்துக் கொண்டனர். தொடர்ந்து, நேற்று முன் தினம் காலை துர்காவுக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசன் செய்யப்பட்டது. மாலையில் அவருக்கு 106 டிகிரி அளவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ரத்தப் போக்கும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மருத்துவர்கள், உயர் சிகிச்சைக்காக துர்காவை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த துர்கா, சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் உயிரிழந்தார்.

இதையடுத்து, தனது மனைவிக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்த மருத்துவர்கள் தவறான சிகிச்சையளித்தன் காரணத்தால் தான் தன் மனைவி இறந்துவிட்டார். எனவே, உரிய முறையில் பிரேத பரிசோதனை செய்து, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கணவர் பன்னீர் செல்வம், புளியம்பட்டி போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.