Skip to main content

தகாத உறவால் ஆற்றில் புதைக்கப்பட்ட பெண்...!

Published on 21/09/2019 | Edited on 21/09/2019

காவல்நிலையத்தில் காணாமல் போனவர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்த, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கொலை செய்து புதைக்கப்பட்ட நிலையில் இன்று சிவகங்கை மாவட்டம் வடகீழ்குடி ஆற்றுப்படுகையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
 

police


புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகிலுள்ள விளானூர் கிராமத்தை சேர்ந்தவர் பஞ்சவர்ணம் (48). இவருடைய கணவர் பாலசந்தர் இறந்து பல வருடங்களாகிவிட்ட நிலையில், தன்னுடைய மகன் மற்றும் மூன்று மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்த இவர், தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், தனது நகைகளை வங்கியில் அடகு வைத்து பணம் வாங்கி வருவதாக இவர் கடந்த 4.09.19 புதன்கிழமையன்று வீட்டை விட்டு வெளியில் சென்றவர் திரும்பவில்லையென்பதால் இவரது மகன் பால்வண்ணச்சாமி "தனது தாயை காணவில்லை" என ஆவுடையார்கோவில் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். 

 

police


காவல்துறையினர் விசாரித்து வந்தநிலையில், பஞ்சவர்ணத்துடன் அடிக்கடி மொபைல் போனில் பேசிய காளிமுத்து சிக்கியுள்ளான். அவனை தொடர்ந்து விசாரிக்கவே, தனது நண்பர்கள் குமார் மற்றும் லனின்பாய் ஆகிய இருவருடன் சேர்ந்து பஞ்சவர்ணத்தை கொலை செய்து சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை தாலுகா காவல் நிலையத்திற்குட்பட்ட வடகீழ்குடி ஆற்றுப்படுகையில் புதைத்தது ஒப்புக்கொண்டுள்ளான். கொலையாளி காளிமுத்து அடையாளம் காட்ட புதைத்து மறைக்கப்பட்டு சிதிலமடைந்த நிலையிலுள்ள பஞ்சவர்ணத்தின் பிணத்தையும், ரூ.லட்சம் பணம் மற்றும் ஏழரைப் பவுன் நகையையும் கைப்பற்றியுள்ளது காவல்துறை.

 

police


முதன்மைக் கொலைக்குற்றவாளியான காளிமுத்து காவல்துறையினரிடம் கொடுக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்திலோ., " எனக்கும் பஞ்சவர்ணத்திற்கும் நெருங்கிய உறவு உள்ளது. இதனால் எங்களுக்குள் அடிக்கடி கொடுக்கல் வாங்கலும் உண்டு. தற்பொழுது கடுமையான கடனில் இருப்பதால் அவரிடமிருந்து நகைகளை கேட்டேன். முதலில் தருவதாக கூறியவர் அதற்கடுத்து இல்லை என மறுத்துவிட்டார். இதனால்," என்னுடைய நகை காரைக்குடியில் அடகில் உள்ளது. அது பெரிய சங்கிலி. ஏறக்குறைய 25 பவுன் தேரும். தற்பொழுது ஏலத்திற்கு வரவுள்ளது. அதனால் நீ உன்னிடமுள்ள நகைகளைக் கொண்டு அடகு வைத்து பணத்தைக் கொடு. அந்தப் பணத்தை கொண்டு என்னுடைய சங்கிலியை மீட்டு உன்னிடமே அந்த சங்கிலியைத் தந்துவிடுவேன்." என ஆசை வார்த்தைக் கூறவும் சம்பவத்தினத்தன்று என்னுடைய இருசக்கர வாகனத்தில் வந்து நகை அடகு வைத்து பணத்துடனே வந்தார். 

நானும் அறந்தாங்கி வழியாக காரைக்குடி கூட்டிட்டு வந்து அடகுக் கடைக்கார ஆள் இல்லை என பொய் கூறி, தேவக்கோட்டை வழியாக மீண்டும் சொந்த ஊருக்கு கூட்டி சென்றேன். இருட்டிய நேரம் என்பதால் அது எனக்கு சாதகமானது. மீண்டும் நெருக்கமானோம். முன்னரே நான் தீட்டிய திட்டத்தின் படி வடகீழ்குடி ஆற்றுப்படுகை பக்கம் என்னுடைய கூட்டாளிகள் அங்கு காத்திருந்தார்கள். இந்தவேளையில் என்னுடைய கூட்டாளிகளை வைத்து அவளை மிரட்டிப் பார்த்தேன். மசியவில்லை. வேறு வழியில்லாததால் மூவருமாக சேர்ந்து கொலை செய்தோம். என்னுடைய செல்போன் காட்டிவிட்டது." என்றிருக்கின்றான் அவன்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.