Skip to main content

அழகு நிலையத்தில் உருவான உறவு... கண்டித்த கணவனைக் கொன்று நாடகமாடிய மனைவி...

Published on 23/06/2021 | Edited on 23/06/2021
Surrender of boyfriend who cut off husband with wife's partner

 

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த கோதண்டபாணி (36) என்பவர் இன்டீரியல் டெக்கரேஷன் தொழில் செய்து வந்துள்ளார். இவரது மனைவி நிரோஷா(30). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த இருபதாம் தேதி அதிகாலை தனது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் தனது கணவரை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடிவிட்டதாக நிரோஷா வீட்டிற்கு வெளியே ஓடிவந்து சத்தம் போட்டுள்ளார். அக்கம்பக்கத்தினர் ஓடிச்சென்று பார்த்தபோது, அந்த மர்ம நபர் அங்கு இல்லாததால், உடனடியாக சைதாப்பேட்டை போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

 

அவர்களது விசாரணையில் நிரோஷாவின் கள்ளக்காதலன் மணிகண்டன் என்பவர் நிரோஷாவின் கணவன் கோதண்டபாணியை கொலை செய்தது தெரிய வந்துள்ளது. மேலும் விசாரணை செய்ததில் டி.நகரில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் நிரோஷா வேலை செய்து வந்துள்ளார். அவரது அழகு நிலையத்தின் அருகே உள்ள டெய்லர் கடையில் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள அணைப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த திருமணமாகாத மணிகண்டன்(30) என்பவர் வேலை செய்து வந்துள்ளார். அவருக்கும் நிரோஷாவிற்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் இது காதலாக மாறியுள்ளது. கோதண்டபாணி வேலைக்குச் சென்றதும் மணிகண்டன் அவரது வீட்டுக்குச் சென்று நிரோஷாவுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்த விவகாரம் கோதண்டபாணிக்கு தெரிய வந்துள்ளது.

 

இதையடுத்து அவர் தனது மனைவி நிரோஷாவை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நிரோஷா தனது கள்ளக்காதலன் மணிகண்டன் உடன் சேர்ந்து கோதண்டபாணியை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். அதன்படி, சம்பவத்தன்று அதிகாலை கோதண்டபாணி வீட்டில் நன்றாகத் தூங்கிக்கொண்டு இருக்கும் போது கள்ளக்காதலன் மணிகண்டனை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். தூங்கிக்கொண்டிருந்த கோதண்டபாணியை மணிகண்டன் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். பின்னர் அவருக்கு நிரோஷா தப்பிச் செல்ல உதவி செய்துள்ளார். அதன் பிறகு வீட்டுக்கு வெளியே வந்து யாரோ மர்ம நபர் தனது கணவரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடுவதாக நாடகமாடிக் கத்தி சத்தம் போட்டுள்ளார் என்பது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.

 

இதையடுத்து நிரோஷாவை போலீஸார் கைது செய்துள்ளனர். தலைமறைவான மணிகண்டனை தீவிரமாகத் தேடிவந்தனர். இந்த நிலையில் மணிகண்டன் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். மணிகண்டனை நீதிமன்ற உத்தரவுப்படி சைதாப்பேட்டை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். சென்னையில் கொலை செய்து விட்டு சங்கராபுரத்தில் சரண்டரான கொலையாளி குறித்து தகவலறிந்த சங்கராபுரம் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sharmila handed over to Praveen parent

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணைக் கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்தக் காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால், ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுதோடு கொலைக்கு காரணமான தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஷர்மிளாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று (25.04.2024) வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Next Story

ஆஜரான மாவட்ட ஆட்சியர்கள்; விசாரணை இடத்தை மாற்றிய அமலாக்கத்துறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors present ed changed the place of investigation

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி, அரியலூர் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா, கரூர் ஆட்சியர் தங்கவேல், திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் இன்று (25.04.2024) காலை 10.30 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது மாவட்ட ஆட்சியர்களிடம் நுங்கம்பாக்கத்தில் மற்றொரு இடத்தில் உள்ள மண்டல கிளை அலுவலகத்திற்கு செல்லுமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.