Skip to main content

திருமணத்தை மீறிய உறவு; கணவனைக் கொல்ல முயன்ற மனைவி! 

Published on 31/01/2023 | Edited on 31/01/2023

 

Woman and her boy friend police arrested

 

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகேயுள்ள சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வெங்கடேசன், அனிதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) தம்பதியினர். இந்த தம்பதியருக்கு இரண்டு மகன், ஒரு மகள் என 3 குழந்தைகள் உள்ளனர். லாரி டிரைவரான வெங்கடேசன் மாதத்திற்கு 2 அல்லது 3 முறை வீட்டிற்கு வந்து பிள்ளைகள் மற்றும் மனைவியை பார்த்துவிட்டு செல்வது வழக்கம். இவருடைய மனைவி அனிதா குள்ளஞ்சாவடி அருகேயுள்ள தனது சொந்த ஊரான தோப்புக்கொல்லை கிராமத்திற்கு கூலி வேலைக்கு தினமும் பேருந்தில் சென்று வருவார். 

 

அதேசமயம் வெங்கடேசனின் நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான சண்முகம் (45) என்பவர் வெங்கடேசன் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். இதனால் சண்முகத்திற்கும், வெங்கடேசனின் மனைவியான அனிதாவிற்கும் திருமணம் கடந்த உறவு ஏற்பட்டுள்ளது. மேலும் அனிதாவை தினமும் தனது ஆட்டோவில் அழைத்து சென்று வந்துள்ளார். அவ்வப்போது இருவரும் பலமுறை தனிமையில் இருந்துள்ளனர். ஒருமுறை இவர்கள் இருவரும் வீட்டில் தனிமையாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வெங்கடேசன் பின்னர் மனைவி மற்றும் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தோப்புக்கொல்லை கிராமத்திற்கு சென்று 6 மாத காலமாக அந்த கிராமத்தில் வசித்து வந்தனர். 

 

இருப்பினும் சண்முகமும் அனிதாவும் போனில் தொடர்பு கொண்டு அடிக்கடி பேசி வந்துள்ளனர். இந்த விஷயம் கணவர் வெங்கடேசனுக்கு தெரிய வரவே இவர்களின் சந்திப்பிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் வெங்கடேசனை கொலை செய்ய திட்டமிட்ட சண்முகம், மதுவில் விஷ மருந்தை கலந்து அனிதாவிடம் கொடுத்துள்ளார். அதனை அனிதா கணவரிடம் கொடுத்துள்ளார். அதில் விஷம் கலந்து இருப்பது தெரியாமல் வெங்கடேசன் மனைவி கொடுத்த மதுவை வாங்கி வீட்டில் வைத்து குடித்துள்ளார். குடித்த சிறிது நேரத்தில் வெங்கடேசன் மயக்கமடையவே அவரை அருகில் உள்ள குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இதுகுறித்து உறவினர்களுக்கு சந்தேகம் எழவே குள்ளஞ்சாவடி காவல்நிலையத்தில் உறவினரான கந்தன் புகார் கொடுத்துள்ளார். புகாரைப் பெற்றுக் கொண்ட காவல் துறையினர் அனிதா மற்றும் சண்முகம் இருவரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இருவரும் மதுவில் விஷம் கலந்து வெங்கடேசனை கொலை செய்ய திட்டம் தீட்டியதை ஒப்புக்கொண்டனர். அதையடுத்து குள்ளஞ்சாவடி போலீசார் அனிதா மற்றும் சண்முகம் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

 

இதேபோல் பண்ருட்டி அடுத்த தட்டாஞ்சாவடி காந்திநகரை சேர்ந்த சக்திவேல் (வயது 28) என்பவருக்கும் அங்குசெட்டிபாளையத்தை சேர்ந்த, கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்ணுக்கும் ஏற்பட்ட உறவால் அந்த பெண்ணை ஏற்கனவே காதலித்து வந்த பண்ருட்டி களத்துமேட்டை சேர்ந்த ஆட்டோ டிரைவரான சுமன் என்பவர் ஆத்திரமடைந்தார். 

 

கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி அதிகாலை காளியம்மன் கோவில் பின்புறத்தில் சக்திவேல் வெட்டி படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதற்கிடையில் சம்பந்தப்பட்ட பெண்ணும் தற்கொலை செய்து கொண்டார். சக்திவேல் கொலை வழக்கு தொடர்பாக புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து சுமன் மற்றும் அவரது நண்பர்கள் வசந்தகுமார், குணா ஆகிய மூவரையும் கைது செய்த நிலையில் அந்த கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் சில குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைத்து தேடி வந்தனர். 

 

Woman and her boy friend police arrested

 

இந்த நிலையில் கொக்குபாளையம் கெடிலம் ஆற்றில் சந்தேகப்படும்படி சிலர் பதுங்கி இருப்பதாக நேற்று கிடைத்த தகவலின் பெயரில் அவர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் பண்ருட்டியை சேர்ந்த மாரியப்பன் மகன்கள் மணிகண்டன்(23), மகேஷ்(21) கொக்குபாளையத்தை சேர்ந்த அசோக் மகன் ஆட்டோ டிரைவர் அஜித்(23) என்பதும் சக்திவேல் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம்;நடந்தது என்ன? - காவல்துறை விளக்கம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
womanincident What happened Police explanation

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ள பக்ரிமாணியம் கிராமத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக ஒரு பெண் வெளியில் கூறியதாகவும், இதனைக் கேட்ட அதே ஊரைச் சேர்ந்த சிலர் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதோடு இவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அந்த பெண்ணை பலமாக தாக்கியதாகவும் கூறப்பட்டது. இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாகவும் கூறப்பட்டது. இது குறித்து உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், இந்த கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “கடந்த 19.04.2024 அன்று மாலை சுமார் 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பக்கிரிமணியம் கிராமத்தில் உள்ள ஆலமரம் முன்பு இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. ஒருபுறம் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் (அனைவரும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்) மற்றொரு பக்கம் ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் (அனைவரும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்). ஜெயசங்கரின் மகள் ஜெயப்பிரியாவை கிண்டல் செய்ததற்காகவும். ஜெயக்குமாரை தாக்கியதாக அவர் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுமாறு கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காகவும் தன்னெழுச்சியாக வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த தகராறில், இரு தரப்பினரும் ஆயுதம் ஏந்தாமல் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ள, கோமதி (ஜெயக்குமாரின் மனைவி) தலையிட்டு பிரச்னையை தடுக்க முயலும் போது. கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு (PHC)  அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் Cr.No. 96/2024 U/s 147, 148, 294 (b), 323, 324, 506(ii), 302 IPC r/w 4 of TN பெண்கள் துன்புறுத்தல் தடைச் சட்டம் வழக்கு 20.04.2024 அன்று 01.00 மணிக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட மொத்தம் 10 பேரில், ஐந்து பேர், 1. கலைமணி 2. தீபா (கலைமணியின் மனைவி) 3. ரவி 4. மேகநாதன் மற்றும் 5. அறிவுமணி ஆகியோர் கைது செய்யப்பட்டு 20.04.2024 அன்று நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். 

woman incident What happened Police explanation

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், மேற்கண்ட சம்பவம் இரு தரப்பினருக்கும் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக நடந்துள்ளது என்பதும், சமூகவலைத்தளங்களில் பரவிய ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததால் தாக்கியதாக குறிப்பிட்டுள்ளது முற்றிலும் தவறான கூற்றாகும். மேலும் இந்த சம்பவம் தொடர்பான காணொளி முற்றிலும் பொய்யானது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

26 மணி நேரம் விமான பயணம்; கடல் கடந்து வந்து ஜனநாயகக் கடமையாற்றிய மருத்துவர்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
doctor who came to Cuddalore from New Zealand and voted

கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்தவர் வினோத்( 46).  மருத்துவர். இவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நியூசிலாந்தில் வசித்து வருகிறார். அங்கு அவர் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.  இந்த நிலையில் கடலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும், அவர் தனது ஒற்றை வாக்கை செலுத்த சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்க விரும்பினார்.

இதையடுத்து அவர் நியூசிலாந்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்து செல்ல சுமார் ரூ.1.70 லட்சம் செலவு செய்து டிக்கெட் வாங்கினார். பின்னர் அவர் ஓட்டு போட விமானத்தில் 26 மணி நேரம் பயணம் செய்து சொந்த ஊருக்கு( கடலூர்,செம்மண்டலத்துக்கு) 18 ஆம் தேதி இரவு வந்தார்.  நேற்று மதியம் 12 மணிக்கு கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார்.

பின்னர் இதுகுறித்து மருத்துவர் வினோத் கூறுகையில், வெளிநாட்டில், தமிழ்நாட்டை சேர்ந்த பலர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று தங்களது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையாற்ற முடியாமல் சிரமப்படுகின்றனர். அதனால் வெளிநாட்டில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தபால் வாக்கு அளிக்க அரசு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்றார்.