Skip to main content

முகக்கவசம் அணியாததற்காக இதுவரை 2,61,344 வழக்குகள் பதிவு - தமிழக காவல்துறை தகவல்!

Published on 15/04/2021 | Edited on 15/04/2021

 

without mask peoples tamilnadu police

 

தமிழகக் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, தமிழக அரசின் உத்தரவுப்படி, தமிழக காவல்துறை, முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்ற மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, பல்வேறு வழிமுறைகளைக் கையாளுகிறது. அதில், பொது இடங்களில் முகக்கவசம் அணிய வலியுறுத்தி, முகக்கவசம் அணியாத நபர்கள் மீது 14/04/2021 அன்று மட்டும் 40,538 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 08/04/2021 முதல் இன்று வரை 2,61,344 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் பொருட்டு, சமூக இடைவெளியைப் பின்பற்றாத நபர்கள் மீது 14/04/2021 அன்று மட்டும் 1,011 வழக்குகளும், 08/04/2021 முதல் இன்று வரை 10,018 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

மேலும் தமிழகத்தில் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்கும் பொருட்டு இரு சக்கர வாகனம் ஓட்டும் போது, தலைக்கவசம் அணியாத நபர்கள் மீது 14/04/2021 அன்று 69,653 வழக்குகளும் 08/04/2021 முதல் இன்று வரை 5,39,059 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நான்கு சக்கர வாகனம் ஓட்டும் போது சீட் பெல்ட் அணியாத நபர்கள் மீது 14/04/2021 அன்று 14,868 வழக்குகளும் 08/04/2021 முதல் இன்றுவரை 1,07,836 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

மேலும், அதிகப்படியாக சுமை ஏற்றுதல், வாகனம் ஓட்டும் போது செல்ஃபோன் உபயோகித்தல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் போன்றவற்றின் கீழ் 14/04/2021 அன்று 19,551 வழக்குகளும், 08/04/2021 முதல் இன்று வரை 1,38,250 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.' இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.