Skip to main content

“வேளாண் சட்டங்கள் வாபஸ் பெற்றது முதல்வருக்கு கிடைத்த வெற்றி!” - அமைச்சர் நேரு பெருமிதம்!

Published on 20/11/2021 | Edited on 20/11/2021

 

Withdrawal of agricultural laws is the MK Stalin's victory! Minister Nehru is proud!

 

பிரதமர் மோடி, மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றது என்பது தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி என அமைச்சர் கே.என். நேரு கூறினார்.

 

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டம், சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி அரங்கத்தில் வெள்ளிக்கிழமை (19.11.2021) நடந்தது. மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் இக்கூட்டம் நடந்தது. 

 

தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றனர். பல்வேறு துறைகள் சார்பில் 100க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கினர். 

 

கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியதாவது, “கடந்த 6 மாதத்திற்கு முன்பு திமுகவை வசைபாடிய அதிமுக முன்னாள் அமைச்சர்கள், பாமக எம்.எல்.ஏ.க்கள் கூட தற்போது தமிழக அரசைப் பாராட்டிவருகின்றனர். பொதுமக்கள் உள்பட எல்லோரும் வாழ்த்தும் நல்லாட்சி நடந்துவருகிறது. தற்போது முதல்வரின் முகவரி என்ற தனித்துறையை உருவாக்கி, அலுவலர்களை நியமித்து, மக்களின் கோரிக்கை மனுக்கள் பெறப்படுகிறது. கடந்த 2 நாள்களில் மட்டும் சேலம் மாவட்டத்தில் 26 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. 

 

கடந்த 4 ஆண்டுகளாக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் பாலங்களைத் தவிர வேறு எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. தற்போது மக்கள் அளித்துள்ள மனுக்களின் எண்ணிக்கையே அதற்கு சாட்சியாக உள்ளது.” இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசினார்.

 

அமைச்சர் கே.என். நேரு பேசுகையில், ''சிறப்பு குறைதீர் கூட்டங்களில் மக்கள் வழங்கும் மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, 75 சதவீத மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும். முகாமில் பெறப்படும் மனுக்கள் மீதான தொடர் நடவடிக்கையாக வரும் 26ஆம் தேதி சேலத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. அதில், கல்வித்தகுதிக்கு ஏற்ப இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வசதி ஏற்படுத்த வேண்டும்” என்றார். 

 

இதையடுத்து அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர், “வேளாண் சட்டங்களுக்கு எதிராக குரல் கொடுத்தவர் முதல்வர் மு.க. ஸ்டாலின். தொடர்ந்து சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின்போது சாலைகள் அடைப்பு உள்ளிட்ட பல நெருக்கடி கொடுத்தனர். 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர். இந்தச் சட்டம் வருவதற்கு அப்போதைய அதிமுக அரசுதான் காரணம். தற்போது வாபஸ் பெற்றது முதல்வருக்கும் விவசாயிகளுக்கும் கிடைத்த வெற்றி'' என்றார். 

 

முன்னதாக சேலம் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் வரவேற்றார். சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., திமுக சேலம் மாவட்ட பொறுப்பாளர்கள் டி.எம். செல்வகணபதி (மே), எஸ்.ஆர். சிவலிங்கம் (கி), பார்த்திபன் எம்.பி., உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.

 

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.