Advertisment

ஒயின்ஷாப் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு; சிசிடிவி காட்சியை வைத்து போலீசார் விசாரணை

nn

புதுச்சேரியில் ஒயின்ஷாப் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisment

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அடுத்துள்ளது பங்கூர். அந்த பகுதியில் பிரபு என்பவர் ஷங்கர் ஒயின்ஸ் என்ற தனியார் ஒயின்ஷாப் ஒன்றைநடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு பத்து மணிக்கு அந்த பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவரில், ஒருவர் கீழே இறங்கி கையில் இருந்த நாட்டு வெடிகுண்டை கடையின் மீது வீசினார். அது பயங்கர சட்டத்துடன் வெடித்துச் சிதறியது. இதுகுறித்து வில்லியனூர் போலீசார் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதோடு, சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர். விசாரணையில், நாட்டு வெடிகுண்டு வீசியது அதியூர் பகுதியைச் சேர்ந்த செல்வா என்பது தெரிய வந்தது. இந்நிலையில், தலைமறைவாக உள்ள இளைஞர் செல்வாவை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisment

police Puducherry
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe