Skip to main content

எங்களுக்கும் கரோனா வரனுமா..? இங்க யாரும் வரக்கூடாது... மீனவர்களை விரட்டிய மக்கள்

Published on 28/03/2020 | Edited on 28/03/2020

கரோனா வைரஸ் தொற்று நோய்க்கான விழிப்புணர்வு மக்களிடையே சென்றடைந்திருக்கின்றதோ இல்லையோ அந்நோயினைப் பற்றிய மரண பீதி மக்களிடையே பரவலாகக் காணப்படுகின்றது. அதனின் வெளிப்பாடு தான் கமுதியில் இன்று நடந்ததுள்ளது ஒரு சம்பவம்.

 

Will you come to us, Corona? Nobody can come here ... the people who drove the fishermen

 

அருகிலுள்ள கர்நாடக மாநிலத்தில் ராமநாதபுர மாவட்டத்தினை சேர்ந்த மீனவர்கள் சுமார் 650க்கும் மேற்பட்டோர் பல்லாண்டு காலமாக மீன்பிடி கூலிகளாக தொழில் செய்து வருகின்றனர். தற்பொழுதைய கரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக நாடெங்கும் ஊரடங்கு உத்திரவு அமலுக்கு வர கர்நாடகா மங்களூரில் மீன்பிடி தொழில் முழுமையாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு தொடர்ந்து தங்க இயலாத சூழலில் பெரும்பான்மையான மீனவர்கள் சொந்த மாவட்டத்திற்கு திரும்ப வந்தனர். இதில் பல மீனவர்கள் வாடகை வேன்கள், கார்கள் மற்றும் பஸ்களில் வந்து சத்திய மங்கலத்திற்கும், பண்ணாரிக்கும் இடைப்பட்ட வனப்பகுதியிலுள்ள தமிழக எல்கைப் பகுதியிலுள்ள டோல்கேட் அருகிலேயே இறக்கி விடப்பட்டு அங்கு உரிய மருத்துவ பரிசோதனை செய்து அங்கேயே தங்க வைக்கப் பட்டிருந்ததாக தெரியவருகின்றது.

 

Will you come to us, Corona? Nobody can come here ... the people who drove the fishermen

 

இந்நிலையில், சத்திய மங்கலம் பார்டர் அருகில் தங்க வைக்கப்பட்டிருந்த 150க்கும் மேற்பட்ட ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களை மூன்று அரசு பேருந்துகளில் அமர்த்தி, ராமநாதபுரம் மாவட்டம் கமுதியிலுள்ள தனியார் கல்லூரிக்கு அழைத்து வந்து அங்கேயே அவர்களை தங்க வைத்து தனிமைப்படுத்த முனைந்துள்ளது மாவட்ட நிர்வாகம். தகவலறிந்த பொதுமக்கள் ஒன்றிணைந்து, " எதற்கு இங்கு கொண்டு வந்தீர்கள்..? எங்களுக்கும் கரோனா வரனுமா என்ன..? அவர்களை கல்லூரிக்குள் அனுமதிக்க மாட்டோம் என பேருந்துகளை வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மாவட்ட நிர்வகமோ, " அவர்களுக்கு கரோனா வைரஸ் நோய் தொற்று இல்லை. முழுவதுமாக பரிசோதித்து விட்டோம். இருப்பினும் வெளி மாநிலத்திலிருந்து அழைத்து வந்ததால் இங்குள்ள கல்லூரியில் வைத்து தனிமைப் படுத்தவுள்ளோம்." மக்களிடையே விளக்கம் கொடுத்துப் பார்த்தது. மக்களும் விடாப்பிடியாக இருந்ததால் பேருந்துகள் அங்கிருந்து திரும்ப சென்றன. 

 

Will you come to us, Corona? Nobody can come here ... the people who drove the fishermen

 

மரணப்பீதியுடன் இருக்கும் இம்மக்கள் விழிப்படைவது எப்போது..? அவர்களும் நம் மக்கள் தானே..? என பெருமூச்சிரைக்கின்றனர்  மாவட்டத்து மீனவ மக்கள். இச்சம்பவத்தால் இப்பகுதியில் பதற்றம் தொற்றியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தேர்தலை புறக்கணிக்கிறோம்'-போராட்டத்தில் இறங்கிய கிராம மக்கள்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'We are boycotting the election'-Village people on strike

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில்  சிதம்பரம் அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் 6500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். தீர்த்தாம்பாளையத்தில் இருந்து பு.முட்லூர் வந்து சேர 3 கிலோ மீட்டர் தொலைவு தூரம் உள்ளது. இதனால் விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இதனால் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த பொதுமக்களின் சாலையை மறித்து, மாற்றி அமைத்து மேலும் 1.6 கிலோ மீட்டர் அதிகரித்து 4.6 கிலோ மீட்டர் தூரத்தில் மாற்றுப் பாதையை அமைத்து தருவதால் ஊர் பொதுமக்கள் அடைகிறார்கள். எனவே தீர்த்தாம் பாளையம் பகுதியில் சுரங்க பாதை (சப்வே) அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து பேராடி வருகின்றனர்.

இந்நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், செவிமடுக்காத அரசியல்வாதிகளையும், அவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலையும் முற்றிலும் புறக்கணிப்பதாக அறிவித்து பதாகைகள் வைத்துள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று கிராம மக்கள் பதாகை மற்றும் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story

வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணி; கிராம மக்கள் எதிர்ப்பு!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Construction of Vallalar International Centre; Villagers issue

கடலூர் மாவட்டம் வடலூரில் ‘வள்ளலார் சர்வதேச மையம்’ அமைக்கப்படும் என்ற வாக்குறுதியைக் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. இதனையடுத்து நடைபெற்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதனைத் தொடர்ந்து இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வடலூரில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை ஏற்கெனவே வெளியிட்டிருந்தார்.

இத்தகைய சூழலில்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சர்வதேச மைய கட்டடம் கட்ட வடலூர் பெருவெளியில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பின்னர் இதற்கான பணிகள் தொடந்து நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் வடலூர் பெருவெளியில் சர்வதேச மையம் அமைப்பதற்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர், மற்றும் பார்வதிபுரம் கிராமத்தினர் எனப் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பார்வதிபுரம் கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடிகளை ஏற்றி தங்களது கண்டனத்தை தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையும் புறக்கணிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். பார்வதிபுர கிராம மக்களால் தானமாக கொடுக்கப்பட்ட இடமான பெருவெளியில் எந்தக் கட்டடமும் கட்டக் கூடாது எனப் பார்வதிபுர கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.