Skip to main content

கிராம கோயிலை அறநிலையத்துறை கைப்பற்றுவதா?- சாமியாடிய பெண்கள், கோபுரத்தில் ஏறிய ஆண்கள்!

Published on 11/01/2022 | Edited on 11/01/2022

 

Will the village temple be taken over by the Treasury?

கிராம கோயிலை அறநிலையத்துறை கைப்பற்ற வந்துவிட்டதாக கூறி திரண்டிருந்த பெண்கள் சாமியாட, ஆண்கள் கோபுரத்தில் ஏறிநின்று முழக்கமிட்டு அதிகாரிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகில் உள்ள மாங்குடி கிராமத்தில் உள்ள பழமையான முத்துமாரியம்மன் கோயில் கிராம கோயிலாக இருந்து வருகிறது. கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு இரு தரப்பினரிடையே உரிமை பிரச்சனை எழுந்ததால் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. பல வருடங்களாக தீர்வு இல்லாமல் கோயில் உள்ளதால் சில மாதங்களுக்கு முன்பு அதிகாரிகள் அழைத்து நடத்திய பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை.

Will the village temple be taken over by the Treasury?

இந்த நிலையில்தான் இன்று (11/01/2022) இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அறந்தாங்கி போலீசாருடன் கோயிலுக்கு வந்து கோயில் சாவியை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தகவல் ஊருக்குள் வேகமாக பரவ கோயிலில் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் திரண்டனர். கிராம கோயிலை அறநிலையத்துறை கைப்பற்ற விடமாட்டோம் என்று கூறி கோயில் வாசலில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

 

கூட்டத்தில் இருந்த ஏராளமான பெண்கள் சாமியாடினார்கள். இளைஞர்கள் கோயில் கோபுரத்தின் மீது ஏறி நின்று முழக்கமிட்டனர். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Will the village temple be taken over by the Treasury?

தொடர்ந்து பேசிய அதிகாரிகள் பொதுமக்கள் அனைவரும் வழிபட வேண்டும். அதனால் தான் அதிகாரிகள் வந்திருக்கிறோம். விரைவில் நல்ல முடிவு எடுங்கள் என்று கூறியதுடன் அங்கிருந்து சென்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வேங்கைவயல் விவகாரம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
The vengaivayal Affair Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20 நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அதன்படி கடந்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி முதல் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் இந்த வழக்கை விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள புதுகோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. 

Next Story

அறந்தாங்கியில் பயங்கர தீ விபத்து! - நகைக்கடை, பாத்திரக்கடை எரிந்து சேதம்!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
 fire broke out at a firecracker shop in Aranthangi

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சந்தைப்பேட்டை சாலையில் உள்ள நகைக்கடை மற்றும் பட்டாசுக் கடையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயானது பாத்திரக் கடைக்குப் பரவி அருகே உள்ள கடைகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளதால் தீயை அணைக்கும் பணியில் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் உள்ளிட்ட தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், தீபாவளிக்கு விற்பனை செய்து மீதமுள்ள பட்டாசுகளை குடோனில் வைத்திருந்தனர். அந்த பட்டாசுகளும் வெடித்து தீயை மேலும் பரவச் செய்துள்ளன. நகைக்கடையில் உள்ள தங்க நகைகள், பாத்திரக் கடையில் உள்ள பல லட்சம் மதிப்பிலான அலுமினியம், பித்தளை, எவர்சில்வர் மற்றும் பிளாஸ்டிக் பாத்திரங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கப் போராடி வருகின்றன.

அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.