Skip to main content

தளர்வுகளற்ற ஊரடங்கு தொடருமா...? தமிழக முதல்வர் தலைமையில் ஆலோசனை! 

Published on 04/06/2021 | Edited on 04/06/2021

 

 Will the unrelenting curfew continue ...? Tamil Nadu Chief Minister led consultation!

 

தமிழ்நாட்டில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு மே 24 முதல் ஜூன் 7ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டு, நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் தொடர்ந்து ஊரடங்கை நீட்டிப்பதா என்பது குறித்து தமிழ்நாடு முதல்வர் ஆலோசனை மேற்கொண்டுவருகிறார்.

 

இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர், சுகாதார செயலாளர், டிஜிபி உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். தலைமைச் செயலகத்தில் நடைபெற்றுவரும் இந்த ஆலோசனைக்குப் பிறகு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு 7ஆம் தேதி காலை 6 மணியிலிருந்து மீண்டும் நீட்டிக்கப்படுமா என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும். கரோனா குறைந்த மாவட்டங்களில் சில தளர்வுகள் அளிப்பது பற்றியும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கரோனா அதிகம் உள்ள கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தொடர வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்