Skip to main content

கல்லூரிகளை தாமதமாக திறக்க உச்சநீதிமன்றம் அனுமதிக்குமா? - காத்திருக்கும் தமிழக கல்வித்துறை!

Published on 05/07/2018 | Edited on 05/07/2018

தமிழகத்தில் உள்ள 509 பொறியியல் கல்லூரியில் மாணவ - மாணவிகள் சேருவதற்கான கலந்தாய்வுக்கான விண்ணப்பத்தினை அண்ணா பல்கலைகழகம் வெளியிட்டது. 1,59,631 விண்ணப்பங்கள் வந்துயிருந்தன. அதில் தகுதியான விண்ணப்பங்களுக்கு ரேண்டம் என் ஒதுக்கப்பட்டது.

அவர்களுக்கு கடந்த மாதம் சான்றிதழ் சரிப்பார்ப்பு ஒவ்வொரு மாவட்டத்திலும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தியது. இந்த சான்றிதழ் சரிபார்ப்புக்கு 49,781 பேர் வரவில்லை. மற்றவை ஏற்றுக்கொள்ளப்பட்டன.

 

 


சான்றிதழ் சரிபார்ப்புக்கு வந்தவர்களில் 5397 பேர் சரியான சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை. அவர்கள் ஜீன் 4ந்தேதி மாலை 5 மணிக்குள் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்திற்க்கு நோடியாக வந்து சமர்பிக்க வேண்டும் என்றது. அதன்படி சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்து மீண்டும் சான்றிதழ்களை சரியாக தந்துவிட்டு சென்றுள்ளனர் என தெரிகிறது.

சான்றிதழ் சரிபார்ப்பு தேதி நேற்றோடு முடிந்துவிட்டதால் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுக்கான தேதி இன்று அல்லது நாளை என எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்கிற தகவல் அண்ணா பல்கலைகழகம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

  Will the Supreme Court allow colleges to be delayed? - Waiting for Tamil Nadu education


மருத்துவ படிப்புக்கான முதல் கட்ட கலந்தாய்வு வரும் ஜீன் 10ந் தேதியோடு முடிவடைகிறது. அந்த கலந்தாய்வை கருத்தில் கொண்டு பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துயிருந்தார்.

ஆகஸ்ட் 1ந்தேதி பொறியியல் கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும் என ஏற்கனவே ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டு கலந்தாய்வு தாமதமாவதால் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து ஆகஸ்ட் 20 தேதிக்கு பின் திறக்க அனுமதி பெறவுள்ளது தமிழக உயர்கல்வித்துறை. கடந்த ஆண்டும் இதேப்போல் அனுமதி வாங்கியது என்பது குறிப்பிடதக்கது.
 

​முதன் முறையாக அண்ணா பல்கலைக்கழகம் ஆன்லைன் மூலம் இந்த கலந்தாய்வை நடத்துகிறது. இதன் மூலம் யாரும் சென்னை செல்ல வேண்டியதில்லை. விண்ணப்பித்தவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே தங்களுக்கான கல்லூரி, பாடப்பிரிவை தேர்வு செய்துக்கொள்ள முடியும். இணைய வசதியில்லாதவர்கள், தேர்வு செய்ய தெரியாதவர்களுக்காக மாவட்டத்துக்கு ஒருயிடத்தில் என சேவை மையத்தையும் திறந்துள்ளது பல்கலைக்கழக நிர்வாகம் என்பது குறிப்பிடதக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

உயிரற்ற சடலங்களுக்கு இவ்வளவு மதிப்பா? மாற்றி யோசித்த கேரள அரசு!

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Kerala earned revenue by selling corpses

கேரளாவில் அரசு மருத்துவமனைகளில், பிணவறையில் கேட்பாரற்றுக் கிடந்த சடலங்களை விற்றதன் மூலம் கேரள அரசு 3 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கேரள மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளின் பிணவறைகளில் கேட்பாரற்று கிடந்த சடலங்களை 2008 ஆம் ஆண்டு முதல் கேரளா அரசு விற்பனை செய்துள்ளது. மொத்தமாக 1,122 சடலங்களை தனியார் கல்லூரிகளுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது. மருத்துவ மாணவர்களுக்கு நேரடி பயிற்சி அளிக்க மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மாதிரிகளாக வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் மட்டும் அதிகபட்சமாக கடந்த 11 ஆண்டுகளில் கேட்பாரற்ற 599 சடலங்களை மருத்துவக் கல்லூரிகளுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது.

பதப்படுத்தி வைக்கப்பட்ட சடலம் ஒன்றுக்கு 40,000 ரூபாயும், பதப்படுத்தப்படாத சடலம் ஒன்றுக்கு 20,000 ரூபாயும் என கேரள அரசு வசூலித்துள்ளது. இதில் மொத்தமாக  3.66 கோடி ரூபாய் கேரள அரசு வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story

“போராட்டம் நடத்துவோம்..” - அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் போர்க்கொடி

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
 professors have said they will stage a struggle  if they are not given promotion

தமிழகத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சார்ந்து, திருச்சி உள்ளிட்ட 13 பகுதிகளில் உறுப்புக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு மட்டும் பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் வழங்கப்படுவதாகவும் மற்ற 13 உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றுவோருக்குப் பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன. 

இது தொடர்பாக, அனைத்து பேராசிரியர்களுக்கும் இணையான பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் வழங்க வலியுறுத்தி திருச்சியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழக கல்லூரியில், (தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழகம் ஆசிரியர்கள் கழக திருச்சி கிளை சார்பில்) முதல்வரிடம் கோரிக்கை கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. சங்கத் தலைவர் பிரபாகரன், செயலாளர் உதயகுமார் தலைமையில் பேராசிரியர்கள் இந்த கோரிக்கைக் கடிதத்தைத் திங்கள்கிழமை வழங்கியுள்ளனர்.

உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்குக் கோரிக்கை கடிதத்தை அனுப்பி வைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்தடுத்து போராட்டங்கள் நடைபெறும் என்றும் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதேபோல், பட்டுக்கோட்டை, பண்ருட்டி, திருநெல்வேலி, நாகர்கோயில், திருக்குவளை, விழுப்புரம் உள்ளிட்ட 13 உறுப்புக் கல்லூரிகளின் பேராசிரியர்களும் (தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் கழகம் சார்பில் அந்தந்த கல்லூரியின் முதல்வர்களிடம்) கோரிக்கை கடிதங்களை வழங்கியுள்ளதாகப் பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.