ஆர்ப்பாட்டம், தர்ணா, மறியல், உண்ணாவிரதம் என அனைத்து வகையான அறவழி போராட்டங்களை கையாண்ட பின்னும் முடியாமல் போன பிறகும் இறுதியில் கடையடைப்பு தீர்வாகுமா என வணிகர் சங்கங்களை சேர்ந்த சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.
அவர்கள் கூறுகையில், "பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் நலனையும் கருத்தில் கொண்டு தேதி, நாள், கிழமை புரிந்து கடையடைப்பு அறிவிப்பது மக்கள் நலன் விரும்பும் நல்ல அரசியல் செயல்பாடாக இருக்கும். அதைவிடுத்து எதற்கெடுத்தாலும் கடையடைப்பு என்றால் நாங்கள் வாங்கியுள்ள கடனுக்கு வட்டி தள்ளுபடி கிடைத்திடுமா? பணியாளர்கள் சம்பளம் தள்ளுபடியாகுமா? வங்கி காசோலைகள் நிறுத்தி வைக்கபடுமா? கடை வாடகை இல்லாமல் போய்விடுமா? ஏற்பாடு செய்த சுப காரியங்களை தள்ளி போட முடியுமா? அன்றாடம் காய்சிகளின் வயிறு பசி எடுக்காமல் இருந்திடுமா?
எதற்கெடுத்தாலும், கண்ணில்படும் கடைகள், வணிக நிறுவனங்கள் மட்டுமே கடையடைப்பு என்கிற அதிகாரத்திற்கு இரையாக்குவது என்ன நியாயம்? நம்மை ஆதிக்கம் செய்யும் ஆன்லைன் வர்த்தகம், டிவி சேனல்கள், டாஸ்மாக் மற்றும் பல தொழில்கள் எல்லாம் வழக்கம்போல் தடையின்றி இயங்கிக்கொண்டு தானே இருக்கிறது. ஏன் தனியார் பேருந்துகளே இயங்கத்தானே செய்தது. நாங்கள் என்னபாவம் செய்தோம்.
எல்லா அரசியல் வாதிகளுக்கும் கல்லூரி, பள்ளிகள், தொழில் நிறுவனங்கள் இருக்கிறது. அதையெல்லாம் மூட முன்வரவில்லையே ஏன்?, பெட்ரோல், டீசல் விலை உயர்வு எங்களுக்கும் பெரும் பாதிப்புதான், அதற்காக நாங்கள் கடைகளை அடைக்கிறோம். ஆனால் அதிகாரமுள்ள, வசதியானவர்கள் வீடுகளில் ஒவ்வொரு வீட்டிலும் பத்துக்கும் அதிகமான கார்கள் இருக்கும், எல்லாரிடமும் இரு சக்கர வாகனங்கள் இருக்கும் அதை ஒரு நாள் ஓட்டாமல் நடந்து போக வேண்டியது தானே?. அப்படி செய்தால் எதிர்ப்பு வலுக்கும், பிரச்சினைக்கு தீர்வு வரும், அதைவிட்டு விட்டு கடைகளை அடைப்பதால் என்ன தீர்வுகிடைத்துவிடப்போகுது.
கோயில்கள்கட்ட, கும்பாபிஷேகம் செய்ய, விழா நடத்த, கட்சி மாநாடு, கூட்டம், போராட்டம், ஆர்ப்பாட்டம், பேரிடர், வெள்ளம், புயல், தீ விபத்து என எல்லாவற்றுக்கும் அரசியல் கட்சிகளும் ஏனைய அமைப்புகளும் நிவாரணம், நன்கொடை என்று வணிகர்களின் குரல்வளையை நெருக்குகின்றனர்.
இதுபோதாது என்று அரசினால் தன்னிச்சையாக பல மடங்கு உயர்த்தப்பட்ட சொத்து வரி, தொழில் வரி, ஜிஎஸ்டி வணிக வரி, வருமான வரி, மாசுகட்டுப்பட்டு வரி, குப்பைகளை கையாள வரி என இன்னும் பலவற்றிர்கும் சம்பாதிக்க வேண்டியிருக்கு.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த போராட்டம் அவசியம்.அதை மறுப்பதற்கில்லை. அதே சமயம் வணிகர்களாகிய எங்கள் ஆதங்கத்தை அரசியல் தலைவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம்." என்கிறார்கள்.
அனைத்துப் பிரச்சினைகளுக்கும் கடையடைப்பு தீர்வாகுமா? வணிகர்கள் வேதனை!
சார்ந்த செய்திகள்
Next Story
பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை டாஸ்மாக் கடைகள் 2 மணி நேரம் மூடப்படும்!
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பரமணியன் கடலூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
டாஸ்மாக் பணியாளர்கள் 17 வருடங்களாக பணிபுரிந்து வருகின்றனர். அரசு விதிமுறைப்படி 2 வருடம் பணிபுரிந்தாலே பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். ஆனால் 17 வருடங்களாக பணிபுரியும் டாஸ்மாக் பணியாளர்கள் இதுவரையில் பணி நிரந்தரம் செய்யபடவில்லை.
பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கரோனா பரிசோதனை அனைத்து பணியாளர்களுக்கும் செய்திட வேண்டும், 50 லட்சம் மருத்துவக் காப்பீட்டில் சேர்த்தல் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டமைப்பினர் கோரிக்கை அட்டை அணிந்தும், பின்னர் கோரிக்கை முழக்கம் உட்பட பல போராட்டங்கள் நடத்தியும் தமிழக அரசு இதுவரையில் டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினரை அழைத்துப் பேச முற்படவில்லை.
இதனை வலியுறுத்தி நாளை (25.8. 2020) தமிழகம் முழுவதும் உள்ள 4,000 டாஸ்மாக் கடைகளிலும், பணிபுரியும் உழியர்கள் 2 மணி நேரம் காலை பணியைப் புறக்கணித்து தங்கள் அதிருப்தியை தெரிவிப்பதாக அறிவித்துள்ளனர். இவர்களின் போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கமும் அதரவு அளித்துள்ளது.
Next Story
இனி 24 மணிநேரமும் கடை திறந்திருக்கலாம்!!! அரசாணை வெளியீடு...
தமிழ்நாட்டில் 24 மணிநேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதிதரும் அரசாணையை அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
இதனால் இனி 24 மணிநேரமும், 7 நாட்களும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திறந்திருக்கலாம். தொழில் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பை அதிகரிப்பதற்காக கடைகள் மற்றும் நிறுவனங்களின் திறப்பு நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதனால் வணிகம் செய்பவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.