Published on 01/12/2022 | Edited on 01/12/2022

வரும் சனிக்கிழமை சென்னைகளில் உள்ள பள்ளிகள் செயல்படும் என்று முதன்மைக் கல்வி அலுவலர் விளக்கம் அளித்துள்ளார். கடந்த மாதம் சென்னையில் பல நாட்கள் தீவிர மழை பொழிந்தது. இதன் காரணமாகப் பல நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. தற்போது மழையின் தீவிரம் குறைந்துள்ள நிலையில், வேலை நாட்களை ஈடுசெய்யும் வகையில் நாளை மறுநாள் சென்னையில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் செயல்படும் என்று முதன்மைக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.