ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், கரோனா அச்சுறுத்தலால், வீட்டுக்குள் ஒடுங்கிப்போய்க் கிடக்கும் இந்தியர்கள், ‘கரோனா வைரஸ் கொடியதல்லவா? எத்தனை விமர்சனங்கள் எழுந்தாலும், நரேந்திர மோடி நமது பிரதமர் அல்லவா? கரோனா தடுப்பு நடவடிக்கையாக, 9 நிமிட விளக்கேற்றும் நிகழ்வுக்கு பிரதமரே நமக்கு அழைப்பு விடுத்திருக்கும்போது, அதனை ஒருமித்த மனநிலையில் விளக்கேற்றி நிறைவேற்றுவோம்.’ என்று தீர்மானித்து, இன்று இரவு 9 மணிக்கு, வீட்டுக்குள் மின்விளக்கை அணைத்துவிட்டு, வீதிக்கு வந்து விளக்கேற்றினார்கள்; டார்ச் லைட் அடித்தார்கள். சிவகாசியிலோ, வானவெடிகளை வெடிக்கச் செய்து வான் பரப்பில் வெளிச்சம் பாய்ச்சினார்கள்.
இந்திய தேசத்தின் வலிமையான நம்பிக்கை வெளிச்சம் கரொனாவின் கண்களை கூசச் செய்திருக்குமா? உலக மக்களுக்கு இத்தனை துயரத்தை தந்துவிட்டோமே என, விடைபெற அது முடிவெடுத்திருக்குமா?