Skip to main content

போலி பத்திரங்கள் தயாரிக்க துணைபோகும் மூன்று துறைகள்; நடவடிக்கை எடுக்குமா அரசு?

Published on 04/03/2023 | Edited on 04/03/2023

 

Will the government take action against the three departments involved in producing fake bonds?

 

தமிழகத்தில் போலி பத்திரங்கள் பதிவு செய்வது தொடர்பாக பல புகார்கள் எழுந்த நிலையில், உளவுத்துறை மூலம் அவற்றை கண்காணிக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி உளவுத்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வு பிரிவு டி.எஸ்.பி. தலைமையிலான குழுவினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, திருச்சி லால்குடியைச் சேர்ந்த குமார் என்பவர் போலி முத்திரைத்தாள்கள், போலி அரசாங்க முத்திரைகள், போலி அரசு ஸ்டாம்ப் போன்றவற்றை வைத்திருந்ததாகத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அவரை கைது செய்து கஸ்டடி எடுத்து விசாரணை நடத்தியதில் திருச்சியை சேர்ந்த திமுக பிரமுகரும், பிரபல ரியல் எஸ்டேட் அதிபரும், பிரபல இசையமைப்பாளரின் பெயரைக் கொண்டவரும், லால்குடி பத்திர எழுத்தாளர் இருவர் பெயரும் போலீஸ் டீமிற்கு தெரியவந்துள்ளது.

 

இந்த நிலையில், குமார் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீஸ் அவர்களை விசாரிக்க தீர்மானித்த போது, சமயபுரம் காவல்நிலையத்தில் வேலை பார்க்கும் மறைந்த உயரமான வில்லன் நடிகர் பெயரைக் கொண்ட ஒருவர் ரகசியத் தகவல் அளித்ததால் வெளியூருக்கு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இது காவல்துறையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. தமிழகத்திலேயே லால்குடி, மண்ணச்சநல்லூர் சார்பதிவாளர் அலுவலகங்களில் தான் அதிகளவில் போலி பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கு முக்கியக் காரணம் ஒருசில சார்பதிவாளர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றி வருவதுதான் எனக் கூறப்படுகிறது.

 

கடந்த 2010ல் இருந்து இன்று வரை லால்குடி, மண்ணச்சநல்லூர் சார்பதிவாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்படாமல் ஒரே இடத்தில் பணியாற்றி வருகின்றனர். அதேபோல் இந்த போலி பத்திரங்கள் தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்க முன்வராமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 13 வருடகாலமாக பலகோடி ரூபாய் மதிப்புள்ள இடங்களை லால்குடி, சமயபுரம் பகுதிகளைச் சேர்நத 2 புரோக்கர்கள் தங்களுடைய பெயரில் பதிவு செய்து ஒரு 6 மாதகாலத்திற்குப் பிறகு அந்த திமுகவைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் அதிபரின் பெயருக்கு மாற்றிக் கொடுத்துவிடுவார்கள். இப்படி பல இடங்கள் போலி பத்திரங்கள் மூலம் அபகரிக்கப்பட்டுள்ளது.

 

இதே நிலை நீடித்தால் நாளை பெரும்பாலான இடங்களை இந்த கும்பல் போலி பத்திரங்கள், போலி அரசு முத்திரைகளைக் கொண்டு அபகரிக்கும் நிலை ஏற்படும். இவர்களுக்கு எதிராக புகார் கொடுக்க முன்வர வேண்டிய வருவாய்த்துறையும் அவர்களுக்கு உடந்தையாக இருப்பதாக காவல்துறையினர் கூறுகின்றனர். அதேபோல் இவர்களுக்கு உடந்தையாக இருக்கும் காவலர் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த போலி பத்திரப் பதிவுகளைக் களைய வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Father sentenced to life imprisonment for misbehaving with daughter

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மாற்றுத்திறனாளி (மன நலம் பாதிக்கப்பட்ட ) ஒரு மகள் இருந்தார். கை, கால்களும் செயல் இழந்த அந்த பெண் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் அவரது தாயார் இறந்து விட்டார்.

இதனையடுத்து தனது தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆவது ஆண்டில் பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளியான அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் முசிறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தந்தையான விவசாயியே அவரது மகளை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய விவரம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அடுத்த சில மாதங்களில், பெண்ணுக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் 5 மாதங்கள் கழித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணும் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடந்து வந்தது. வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து விவசாயிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ஜாகிர் உசேன் ஆஜரானார்.

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.