Skip to main content

புகழ்பெற்ற கூத்தாண்டவர் கோவில் திருவிழா நடக்குமா? - குழப்பத்தில் பக்தர்கள்..! 

Published on 10/04/2021 | Edited on 10/04/2021

 

Will the famous Kuttandavar temple festival take place? .. Devotees in confusion

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் (முன்பு விழுப்புரம் மாவட்டம்) உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது கூவாகம் கூத்தாண்டவர் கோவில். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பௌர்ணமி அன்று அரவான் களப்பலி திருவிழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெறுவது வழக்கம். இந்த கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் திருவிழா தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு இருந்தே திருநங்கைகள் வருவது வழக்கம்.

 

அதிலும் தமிழகம் மற்றும் இந்திய அளவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்தும், அயல் நாடுகளில் இருந்தும் திருநங்கைகள் அலையலையாக இந்த திருவிழாவில் வந்து கலந்து கொள்வார்கள். ஒவ்வொரு ஆண்டும் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா மிக விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வந்தது. இந்த திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் துவக்க நாள் முதல் 7 கிராம மக்கள் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடத்துவார்கள். பிறகு சாகை வார்த்தலுடன் விழா நடக்கும் இக்கோவிலுக்கு திருநங்கைகள் பொதுமக்கள் என லட்சக்கணக்கில் கூடுவார்கள்.

 

Will the famous Kuttandavar temple festival take place? .. Devotees in confusion

 

திருவிழா ஆரம்பிப்பதற்கு இரு நாட்களுக்கு முன்பே திருநங்கைகளுக்கு அழகிப் போட்டிகளும், அறிவுத்திறன் போட்டிகளும் நடத்தப்பட்டு திறமையான திருநங்கைகளுக்கு பரிசுகள் வழங்கப்படுவது உண்டு. இவர்களை காண வேண்டும் என்ற ஆவலில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இளைஞர்கள் கூட்டம் கூவாகத்தில் மொய்க்கும். திருநங்கைகள் அலங்காரத்தில் தேவலோக மங்கைகளை போல அலங்கரித்து வருவார்கள். அவர்களோடு இளைஞர்கள் செல்ஃபி எடுப்பதும் அவர்களிடம் கொஞ்சி விளையாடுவதும் எனத் திருவிழா களைகட்டும்.

 

இளம் காளையர்களின் வருகையால் திருவிழா கொண்டாட்டமாக இருக்கும். திருநங்கைகளைப் படம் பிடிப்பதற்காக பத்திரிகையாளர்கள், ஊடகத்தினர் ஆயிரக்கணக்கில் திரண்டு வருவார்கள். அப்படிப்பட்ட பிரமாண்ட திருவிழா கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக நடைபெறாமல் நிறுத்தப்பட்டது. அதே போன்று இந்த ஆண்டும் திருவிழா நிறுத்தப்படுமா, நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம் தமிழக அரசு இன்று 10ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் உள்ள கோவில்களில் திருவிழாக்கள் நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

 

Will the famous Kuttandavar temple festival take place? .. Devotees in confusion

 

இதனால் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா நடக்குமா அல்லது ரத்து செய்யப்படுமா என்று திருநங்கைகள் மற்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இது சம்பந்தமாக அறநிலையத்துறை அதிகாரிகள் தரப்பில் திருவிழா ரத்து செய்வது குறித்து உயர் அதிகாரிகளிடம் இருந்து முறையான உத்தரவு எதுவும் இதுவரை பிறப்பிக்கப்படவில்லை என்றனர். மேலும் அரசு திருவிழாவை ரத்து செய்யுமா என்பது குறித்து இனிமேல்தான் தெரியவரும் என்கிறார்கள். கரோனா நோய் இரண்டாவது அலைவரிசை பரவல் காரணமாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

 

அதனால் இந்த ஆண்டும் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா நடத்தப்படுவது சந்தேகத்திற்கிடமாக உள்ளது என்று மக்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. தற்போது கரோனா பரவல் காரணமாக கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருநங்கையால் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகள்! அம்மன் கோயிலுக்கு தூக்கிச் சென்று வழிபட்ட பெண்கள்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
women who took sprouts raised by transgender woman to Amman Koil and worshipped them

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ளது கல்லாலங்குடி கிராமம். இங்குள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் திருவிழா சித்திரை மாதத்தில் காப்புக்கட்டுதலுடன் தொடங்கி ஒரு வாரத்திற்கு மேல் நடக்கும். இதில் கல்லாலங்குடி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, சூரன்விடுதி, சிக்கப்பட்டி, சம்புரான்பட்டி, கல்லம்பட்டி, ஊத்தப்பட்டி கிராமங்களைச் சேர்ந்தவர்கள் திருவிழாக்களை கொண்டாடுவார்கள். மேலும் சுற்றியுள்ள பல கிராமமக்களும் திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதி பெண்கள் இணைந்து சித்ரா பவுர்ணமி குழ அமைத்து முளைப்பாரி எடுக்கத் தொடங்கினர். விநாயகர் கோயிலில் இருந்து குறைவானவர்களே முளைப்பாரி தூக்கி வந்து வழிபட்டனர். இந்த நிலையில் தான் கம்மங்காடு உதயா உள்ளிட்ட சில திருநங்கைகள் வந்து கல்லாலங்குடி முத்துமாரியம்மனுக்கு கிராம மக்கள் எல்லோரும் முளைப்பாரி தூக்க வேண்டும் என்று கூறியதுடன் சித்ரா பவுர்ணமி குழு பெண்களுடன் இணைந்து கடந்த ஆண்டு ஒரே மாதிரியான பாத்திரங்களில் விதைகளை தூவி 9 நாட்கள் விரதமிருந்து நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை வளர்த்து பெண்களிடம் கொடுத்து ஊர்வலமாக தூக்கிச் சென்று அம்மனை வழிபட்டனர்.

அதே போல இந்த ஆண்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு வந்த திருநங்கை உதயா பவுர்ணமி விழாக்குழு மூலம் முளைப்பாரி தூக்குவோரின் பெயர்களை முன்பதிவு செய்து, கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு சமுதாயக்கூடத்தில் வைத்து சுமார் 400 முளைப்பாரிகளை ஒரே மாதிரியான அலுமினிய பாத்திரத்தில் ஒரே மாதிரியான விதைகளை தூவி, விரதமிருந்து விதை தூவிய பாத்திரத்திற்கு காலை, மாலை என இரு நேரமும் தண்ணீர் தெளித்து, பவுர்ணமி குழுவினர் உதவியுடன் வளர்த்து வந்தார். அனைத்து பாத்திரங்களிலும் ஒரே மாதிரியாக பயிர்கள் வளர்ந்திருந்தது.

செவ்வாய் கிழமை முளைப்பாரித் திருவிழாவிற்கு முன்பதிவு செய்த பெண்கள் ஒரே மாதிரியான சேலையில் வந்தனர். இந்த அழகைக்கான ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். வளர்ந்திருந்த முளைப்பாரிகளை அலங்கரித்து வைத்து ஒரு குடத்தில் அம்மன் சிலை வைத்து பூ அலங்காரம் செய்து வைத்திருந்த நிலையில் கோயில் பூசாரியிடம் அலங்காரத்தில் இருந்த அம்பாள் குடத்தையும் முளைப்பாரிகளை பெண்கள் தலையிலும் தூக்கி வைத்த உதயா அருளாட்டத்துடன் பூசணிக்காய் உடைக்க முத்துமாரியம்மன் கோயிலில் இருந்து தாரை தப்பட்டை முழக்கத்துடன் புறப்பட்ட ஊர்வலம் சுமார் 5 கி மீ தூரத்திற்கு பல பகுதிகளுக்கும் சென்று மீண்டும் முத்துமாரியம்மன் கோயில் வளாகம் வந்தடைந்தது.

women who took sprouts raised by transgender woman to Amman Koil and worshipped them

அனைத்து முளைப்பாரிகளும் கோயில் வளாகத்தில் இறக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று புதன் கிழமை மாலை 4 மணிக்கு மீண்டும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து முளைப்பாரியை ஊர்வலமாக தூக்கிச் சென்று அருகில் உள்ள குளத்தில் விடுகின்றனர். ஒவ்வொரு கிராமத்திலும் முளைப்பாரி திருவிழா என்றால் அவரவர் வீடுகளில் நமண்சட்டிகளில் அல்லது வெவ்வேறு பாத்திரங்களில் மண் நிரப்பி நவதானிய விதை தூவி பயிர் வளர்த்து திருவிழா நாளில் தூக்கி வந்து ஊரின் ஓரிடத்தி்ல் ஒன்று கூடி மண்ணடித்திடலைச் சுற்றி வந்து குளங்களில் விட்டுச் செல்வது வழக்கமாக இருக்கும்.

ஆனால் கல்லாலங்குடி முத்துமாரியம்மனுக்கு திருநங்கை விரதமிருந்து ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை வளர்த்து கிராம மக்களை அழைத்து தூக்கச் செய்து அம்மனை வழிபடச் செய்கிறார் என்பது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. முளைப்பாரியை சிறப்பாக செய்திருந்த திருநங்கை உதயாவிற்கு விழாக்குழு சார்பில் மரியாதை செய்தனர்.

Next Story

கல்லணை கால்வாய்க்கரை வீரமாகாளியம்மன் கோயில் முளைப்பாரித் திருவிழா!

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Kallanai Canal Bank Veeramakaliamman Temple Mulaipari Festival

தை முதல் நாளில் தொடங்கும் திருவிழாக்கள் கிராமங்களில் களைகட்டி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மாசிமகத் திருவிழா கிராம மக்களை குதூகலப்படுத்தியது. அதிலும் புதுக்கோட்டை மாவட்டம் குளமங்கலம் வில்லுனி ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ள ஆசியாவில் உயரமான குதிரை சிலை கொண்ட பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் மாசிமகத் திருவிழாவில் லட்சம் பேர் திரண்டிருந்தனர். ஆட்டம், பாட்டமும், சர்க்கஸ் கலை நிகழ்ச்சிகளும் பஞ்சமில்லாமல் நடந்தது.

Kallanai Canal Bank Veeramakaliamman Temple Mulaipari Festival

அதே போல தான், புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு கிராமத்தில் கல்லணைக் கால்வாய் ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ள வீரமாகாளியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. காப்புக் கட்டியதும் ஒவ்வொரு வீட்டிலும் விரதமிருந்து மண் சட்டிகள், உட்பட பல்வேறு பாத்திரங்களில் நவதானிய விதைகள் தூவி வீட்டுக்குள்ளேயே வைத்து சிறப்பு வழிபாடுகளுடன் வளர்த்து வந்த முளைப்பாரியை தாரை தப்பட்டை முழங்க வான வேடிக்கைகளுடன் கிராம மக்கள் நேற்று ஊர்வலமாக தூக்கிச் சென்று, மண்ணடித் திடலைச் சுற்றி ஒன்று சேர்ந்து கல்லணைக் கரையோரம் உள்ள பெரிய குளத்தில் விட்டனர். 

மேலும் முளைப்பாரியுடன் கொண்டு வந்த படையல் பொருட்களை ஒரே இடத்தில் குவித்து வைத்து படையலிட்டு வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.