ADVERTISEMENT

இ-பாஸ் முறை தொடருமா..? - முதல்வர் தொடர் ஆலோசனை!

11:21 AM Jul 30, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

ADVERTISEMENT

உலகின் பல நாடுகளில் கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. மராட்டியத்திற்கு அடுத்ததாக தமிழகத்தில் கரோனா தொற்று அதிகளவு இருந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை கடந்துள்ளது. மூன்றாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட ஆட்சியர்கள் என அனைவருக்கும் கரோனா பாதிப்பு தற்போது உறுதி செய்யப்பட்டு வருகின்றது. வரும் 31ம் தேதியோடு தமிழகத்தில் ஊரடங்கு நிறைவடைவதால், மாவட்ட ஆட்சியர்களோடு முதல்வர் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இன்று காலை மருத்துவ வல்லுநர் குழுவோடு முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னையை போல கிராமபுறங்களிலும் உயிரிழப்புகள் அதிகாரிக்க என்ன காரணம் என்பது குறித்து மருத்துவர்களோடு அவர் ஆலோசனை செய்து வருகிறார். மேலும் இ-பால் முறையை ரத்து செய்யலாமா அல்லது தொடரலாமா என்று குறித்தும் மருத்துவர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT