Advertisment

தினகரன் மீண்டும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்படுவாரா? - பதில் சொல்ல மறுத்த ஓபிஎஸ்

op

Advertisment

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மதுரை திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், அமைச்சரவையில் மாற்றம் இருக்கலாம் என சொல்லப்படுவது பற்றிய கேள்விக்கு, அமைச்சரவை மாற்றம் என்பது முதலமைச்சரின் தனிப்பட்ட அதிகாரம் என்பதால் அதுபற்றி கருத்துச் சொல்ல விரும்பவில்லை என தெரிவித்தார்.

ஆர்.கே.நகரைப் போல திருப்பரங்குன்றம், திருவாரூரிலும் வெற்றிபெறுவோம் என தினகரன் கூறியது பற்றிய கேள்விக்கு, மிகப்பெரிய தர்மயுத்தத்தை நடத்தி அந்த குடும்பத்தில் இருந்து அதிமுக விடுதலை பெற்றிருக்கிறது. அதிமுகவை மீண்டும் சசிகலா குடும்பத்திற்குள் கொண்டுபோய் திணிக்க டிடிவி தினகரன் முயற்சி செய்கிறார். அது எந்த காலத்திலும் வெற்றி பெறாது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தெரிவித்தார்.

தினகரன் மீண்டும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்படுவாரா என்ற கேள்விக்கு, பதில் சொல்ல மறுத்தார்.

madurai dinakaran ops
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe