Skip to main content

நடிகை மீனா வீட்டை சூரி வாங்கிட்டாரா? இவ்வளவு கோடியா? உண்மை நிலவரம் என்ன?

Published on 23/11/2019 | Edited on 23/11/2019

கடந்த சில நாட்களுக்கு முன்பு நகைச்சுவை நடிகர் சூரி கடந்த 2017ம் ஆண்டு “அம்மன்” உயர்தர சைவ உணவகத்தை மதுரை காமராஜர் சாலையில் துவக்கினார். இந்த உணவகத்துக்கு மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்ததையடுத்து தற்போது நடிகர் சூரி மேலும் இரண்டு புதிய உணவாக கிளைகளை திறந்துள்ளார்.“அம்மன்” உயர்தர சைவ உணவகம் மற்றும் “அய்யன்” உயர்தர அசைவ உணவகம் என்ற இரண்டு புதிய கிளைகளை மதுரை அவனியாபுரம், ஏர்போர்ட் பைபாஸ் சாலையில் துவக்கியுள்ளார். இந்த புதிய உணவகங்களை சூரியின் நண்பர் நடிகர் சிவகார்த்திகேயன் இன்று குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார்.
 

actress soori



இந்த நிலையில் சாலிகிராமத்தில் இருக்கும் நடிகையின் மீனா வீடு விலைக்கு வருவதாக ஒரு தகவல் பரவி வருகிறது. அதோடு அந்த வீட்டை நகைச்சுவை நடிகர் சூரி வாங்கப் போகிறார் என்று ஒரு தகவல் பரவியது. இது பற்றி சினிமா வட்டாரங்களில் விசாரித்த போது, நடிகர் சூரியின் அலுவலகத்திற்கு அருகில் தான் நடிகை மீனாவின் வீடு இருக்கிறது. மேலும், சூரியின் அலுவலகத்திற்கு முகவரி கேட்டால் நடிகை மீனாவின் வீட்டிற்கு பக்கத்தில் தான் உள்ளது என்றும் சொல்வார்கள். அதனால் அந்த வீடு விலைக்கு வருகிறது என்று தகவலால் அந்த வீட்டை சூரி வாங்கிவிட்டார் என்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அது வெறும் வதந்தி மட்டுமே. அதில் உண்மையில்லை என்று கூறப்பட்டது. மேலும் அந்த வீட்டின் மதிப்பு 6.5 கோடி ரூபாய் இருக்கும் என்றும் சொல்கின்றனர். ஆனால் இதுவரை மீனா தரப்பிடம் இருந்தோ, சூரி தரப்பிடம் இருந்தோ வீட்டை வாங்கியது சம்மந்தமாக எந்த ஒரு அதிகாரப் பூர்வ தகவலும் வரவில்லை என்பது குறிப்படத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நிஜ வாழ்க்கையில் நடந்த தனுஷ் படக் கதை - பகிர்ந்த நடிகர்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kishen das got engaged to his best friend like in dhanush Thiruchitrambalam movie

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் கிஷன் தாஸ். அதில் சிறிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்த நிலையில், ஹீரோவாக ‘முதல் நீ முடிவும் நீ’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். பின்பு ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் வெளியான சிங்கப்பூர் சலூன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்போது தருணம், ஈரப்பதம் காற்று மழை உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். 

இந்த நிலையில், கிஷன் தாஸுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதனைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்த அவர், “அவள் இல்லை என மறுக்கவில்லை. திருச்சிற்றம்பலம் படக் கதை என் நிஜ வாழ்க்கையில் நடந்துள்ளது. என் நெருங்கிய நண்பருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் நிச்சயதார்த்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். 

அவருக்கு தற்போது மஞ்சிமா மோகன், ஆத்மிகா, கௌரி கிஷன் உள்ளிட்ட பல்வேறு திரைப் பிரபலங்கள் கிஷன் தாஸ் பதிவிற்கு வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்துள்ளனர். மேலும் ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.    

Next Story

‘டிஜிட்டல் இந்தியா’ - அதிர்ச்சி அனுபவத்தைப் பகிர்ந்த நடிகை

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
hina khan beggar incident

பாலிவுட்டில் தொலைக்காட்சி தொடர்களிலும், நிகழ்ச்சிகளிலும் மற்றும் ஆல்பம் வீடியோக்களிலும் நடித்து வருகிறவர் நடிகை ஹினா கான். மேலும் டேமேஜ்டு 2 வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் யாசகர் ஒருவரின் செயல் குறித்து பதிவிட்டிருந்தார். அது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அந்தப் பதிவில், “நான் சிக்னலில் கிரீன் சிக்னலுக்காக காத்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு நபர் என் கார் கதவை தட்டினார். கொஞ்சம் பணம் கொடுத்து உதவ முடியுமா என்று கேட்டார். என்னிடம் பணம் இல்லை என்றேன். வீட்டில் தம்பி, தங்கைகள் இருக்கிறார்கள். தயவு செய்து ஏதாவது உதவுங்கள் என்றார். நான் மீண்டும் என்னிடம் பணம் இல்லை. ஸாரி என்றேன். கூகுள் பே இருக்கு மேடம். அந்த நம்பர் தருகிறேன் என்றார். அது எனக்கு அதிர்ச்சியளித்தது. 

பின்பு அவருக்கு கூகுள் பே மூலம் பணம் அனுப்ப முயற்சிக்கும் போது, ஒரு வாரத்துக்கான ரேஷன் பொருட்கள் வாங்க பணம் அனுப்புங்க மேடம் என்றார். இது என்னை மேலும் அதிர்ச்சியாக்கியது. டிஜிட்டல் இந்தியா தற்போது சிறந்ததாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.