கடந்த சில நாட்களுக்கு முன்பு நகைச்சுவை நடிகர் சூரி கடந்த 2017ம் ஆண்டு “அம்மன்” உயர்தர சைவ உணவகத்தை மதுரை காமராஜர் சாலையில் துவக்கினார். இந்த உணவகத்துக்கு மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்ததையடுத்து தற்போது நடிகர் சூரி மேலும் இரண்டு புதிய உணவாக கிளைகளை திறந்துள்ளார்.“அம்மன்” உயர்தர சைவ உணவகம் மற்றும் “அய்யன்” உயர்தர அசைவ உணவகம் என்ற இரண்டு புதிய கிளைகளை மதுரை அவனியாபுரம், ஏர்போர்ட் பைபாஸ் சாலையில் துவக்கியுள்ளார். இந்த புதிய உணவகங்களை சூரியின் நண்பர் நடிகர் சிவகார்த்திகேயன் இன்று குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இந்த நிலையில் சாலிகிராமத்தில் இருக்கும் நடிகையின் மீனா வீடு விலைக்கு வருவதாக ஒரு தகவல் பரவி வருகிறது. அதோடு அந்த வீட்டை நகைச்சுவை நடிகர் சூரி வாங்கப் போகிறார் என்று ஒரு தகவல் பரவியது. இது பற்றி சினிமா வட்டாரங்களில் விசாரித்த போது, நடிகர் சூரியின் அலுவலகத்திற்கு அருகில் தான் நடிகை மீனாவின் வீடு இருக்கிறது. மேலும், சூரியின் அலுவலகத்திற்கு முகவரி கேட்டால் நடிகை மீனாவின் வீட்டிற்கு பக்கத்தில் தான் உள்ளது என்றும் சொல்வார்கள். அதனால் அந்த வீடு விலைக்கு வருகிறது என்று தகவலால் அந்த வீட்டை சூரி வாங்கிவிட்டார் என்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அது வெறும் வதந்தி மட்டுமே. அதில் உண்மையில்லை என்று கூறப்பட்டது. மேலும் அந்த வீட்டின் மதிப்பு 6.5 கோடி ரூபாய் இருக்கும் என்றும் சொல்கின்றனர். ஆனால் இதுவரை மீனா தரப்பிடம் இருந்தோ, சூரி தரப்பிடம் இருந்தோ வீட்டை வாங்கியது சம்மந்தமாக எந்த ஒரு அதிகாரப் பூர்வ தகவலும் வரவில்லை என்பது குறிப்படத்தக்கது.