Skip to main content

மின்வேலியில் சிக்கி காட்டுயானை உயிரிழப்பு

Published on 23/04/2019 | Edited on 23/04/2019

கோவை மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட, நெல்லித்துறை பகுதியில் இன்று அதிகாலை அளவில் 30 வயது மதிக்கதக்க ஆண் யானை விவசாய நிலங்களில் உள்ள பாக்கு மரத்தினை சாய்க்க முயற்சிக்கும்போது அருகில் இருந்த மின்சாரவயரில் பட்டு மின்சாரம் தாக்கியதில் யானை அதே இடத்தில் இறந்துவிட்டது. 

 

elephant

 

elephant

 

காற்று மற்றும் மழை காரணமாக உடனடியாக மீட்பு பணிகள் செய்யமுடியாத சூழலில் காலை 10 மணியளவில் வனமருத்துவர்கள் கொண்ட குழு பிரேத பரிசோதனை செய்தனர். சம்பவம் நடந்த இடம் கல்லாறு யானைகள் வழித்தடமாகும் இந்த யானை வழித்தடத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருப்பதால்தான் யானைகள் திசைமாறி வந்து இது போன்று இறக்கின்றன என வன ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

                                                                                                                                              சிவா 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஊருக்குள் நுழைந்த காட்டு யானை; அச்சத்தில் கிராம மக்கள்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
A wild elephant entered the town; Villagers in fear

கோவையில் வேடப்பட்டியில் திடீரென காட்டு யானை ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் பேரூர் அடுத்துள்ள வேடப்பட்டி, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே ஒற்றை காட்டு யானை ஒன்று திடீரென ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தி வருகிறது. அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் தோட்டங்களில் முகாமிட்டு பெரும் அச்சுறுத்தல் கொடுத்து வருகிறது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கரடிமடை பகுதிக்கு வந்த காட்டு யானை தாக்கியதில் நான்கு பேர் காயமடைந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை பேரூர் வேடப்பட்டி சாலை வழியாக ஒற்றை காட்டு யானை ஊருக்குள் புகுந்தது. சுமார் 20 கிலோமீட்டர் வனப்பகுதியில் இருந்து கடந்து வந்துள்ள காட்டு யானை தனியார் கல்லூரியின் பின்புறத்தில் முகாமிட்டுள்ளது.

காட்டு யானையை அந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்த கோவை வனச்சரக வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பாதுகாப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. காட்டு யானை சுற்றி வருவதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒற்றைக் காட்டுயானை ஊருக்குள் புகுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

யானைப் பாகன் உயிரிழப்பில் மர்மம்; கண்ணீருடன் முதல்வரின் தனிப்பிரிவில் மனு

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
Mystery in elephant Bagan ; Petitioner's wife in a separate division of the Chief

பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் யானைகள் முகாமில் பணிபுரிந்த தன்னுடைய கணவர் உயிரிழப்பில் மர்மம் இருப்பதாகத் தமிழக முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில், 'பொள்ளாச்சி தாலுகா டாப்ஸ்லிப் கோழிகமுத்தி செட்டில்மெண்ட் யானைகள் முகாமில் 15 வருடங்களாக யானை பாகனாகப் பணியாற்றி வந்த (R. மஞ்சு) எனது கணவர் S. ராஜ்குமாரை கடந்த டிசம்பர் மாதம் 2ம் தேதி அன்று, அவருடன் பணியாற்றி வந்த மற்றொரு யானை பாகன் சந்திரன் என்பவர் 'வனத்துறை அதிகாரி வர சொன்னார்' என  காலை 10 மணி அளவில், வீட்டிலிருந்து அழைத்துச் சென்றார்.

சந்திரன் என்பவருடன் சென்ற எனது கணவர் ராஜ்குமார், மூன்று நாட்களாக வீடு திரும்பவில்லை. டிசம்பர் மாதம் 5ம் தேதி மாயத்துரை என்ற வனத்துறை அதிகாரி, எனது மாமியார் தங்கம் அவர்களுக்கு தொலைபேசி மூலம், உங்களது மகன் ராஜ்குமார் சேத்துமடை செக்போஸ்டில் இருக்கிறார். வாருங்கள் என்று தொலைபேசி மூலம் தகவல் கொடுத்ததின் பேரில் நாங்கள் அங்கு விரைந்து சென்றோம். நாங்கள் அங்கு சென்று பார்த்தபோது, சேத்துமடை செக் போஸ்ட்டிற்கு அரை கிலோ மீட்டர் தூரத்தில், ஆர்.டி.ஓ. மற்றும் வனத்துறை அதிகாரிகள், ஆம்புலன்ஸ், திரளான பொதுமக்கள் அங்கு திரண்டு இருந்தனர். இவர்களை எல்லாம் பார்த்தபொழுது எங்களுக்கு மிகவும் பயம் வந்துவிட்டது. அதன் பிறகு என்னுடைய கணவர் ராஜ்குமார் மர்மமான முறையில், அழுகிய நிலையில் அங்கு பிணமாக கிடந்தார்.

பிறகு உடலை அங்கிருந்து போஸ்ட்மார்ட்டம் செய்வதற்கு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். எங்களுக்கு தெரிந்த சிலரிடம் விசாரித்தபோது, டாப் ஸ்லிப்பில் இருந்து, வேனில் சந்திரன், விஜயன், அருண், வெங்கடேசன் ஆகிய நால்வரும் தான் உன் கணவர் ராஜ்குமாரை அழைத்துச் சென்றனர் என்று கூறினர். ஆனால் காவல்துறை அவர்களை விசாரணை செய்ததாக தெரியவில்லை.

எனவே நாங்கள் ஆனைமலை காவல் நிலையத்தில் என் கணவர் ராஜ்குமார் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று புகார் தெரிவித்தோம். புகாரின் அடிப்படையில் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சென்னையில் உள்ள முதலமைச்சர் தனிப்பிரிவில், எங்களுக்கு நியாயமான முறையில், விசாரணை செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து நீதியை நிலை நிறுத்த வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.