Skip to main content

‘என்னா வெயிலு...’ - காட்டு யானையின் ஆனந்தக் குளியல்

Published on 02/05/2023 | Edited on 02/05/2023

 

wild elephant can bathe in water under the influence of heat

 

‘மக்களே.. மதியம் 12 மணியிலிருந்து 3 மணி வரை வெளியே வரவேண்டாம்’ என்று அரசின் மாவட்ட நிர்வாகமே மக்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அடிக்கிற வெயிலுக்கு மனிதர்கள் என்றும் விலங்குகள் என்றும் பாகுபாடு கிடையாதே. இதனால் பரிதவித்துப் போன காட்டு யானை ஒன்று தண்ணீரைக் கண்டதும் ஆனந்தக் குளியல் போட்டுள்ளது. 

 

தமிழக - கேரள எல்லைப்புறமான தென்காசி மாவட்டத்தின் புளியரையை ஒட்டி கேரளாவின் ஆரியங்காவு நகரமிருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் அந்தப் பகுதியான ஆரியங்காவு பஞ்சாயத்திற்குட்பட்ட மலைப்பகுதியான அம்பநாடு அரண்டல் பகுதியில் அடர் தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. அந்த மலைப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகளிருக்கின்றன.

 

கடுமையான கத்தரி வெயில் காரணமாகவும் கோடைக்காலம் என்பதாலும் தண்ணீர் மற்றும் உணவுக்காக வனவிலங்குகள் தரையிறங்குவதுண்டு. நேற்று முன்தினம் அரண்டல் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்திற்கு காட்டுயானை ஒன்று தண்ணீர் தேடி வந்திருக்கிறது. பள்ளத்தின் ஒரு பகுதியின் கிணற்றுப் பகுதியில் அகண்ட ஆழமான குளத்தைக் கண்டதும் குஷியாகிப் போன யானை தண்ணீரிலிறங்கி மனம் போன போக்கில் மூழ்கியும் நீச்சலடித்தும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆனந்தக் குளியல் போட்டிருக்கிறது.

 

நீண்ட நேரம் யானை நீச்சலடிப்பதை அந்தப் பகுதியின் மக்கள் பார்த்து ரசித்துள்ளனர். அது சமயம் யானை தனது தும்பிக்கையால் தண்ணீரைச் சிதறடித்து மகிழ்ந்தது. பின்னர் கிளம்பிய யானை, அருகிலுள்ள பலா மரத்தின் பலா காய்களைப் பிடுங்கித் தின்று பசியாறியுள்ளது. சில வேளைகளில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாகவும் வருவதுண்டு. “அடிக்கடி ரவுண்ட் வரும் காட்டு யானைகள் ஒரு சில வேளைகளில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தலாகவும் தாக்குவதும் தொடர் சம்பவமாயிறுச்சி. எனவே வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம்” என்று கூறினார் அரண்டல் பகுதி தேயிலைத் தோட்ட தொழிலாளி ஒருவர். வெயிலின் அகோரம் பலமான யானையையும் பெருமூச்சு விட வைத்திருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.