Skip to main content

“எங்கூட இல்லாமல் யாரு கூட இருக்கப் போற...” - சந்தேக கணவனை கொன்ற மனைவி

Published on 30/01/2023 | Edited on 30/01/2023

 

 wife who incident her husband

 

தென்காசி மாவட்டத்தின் கடையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். கட்டுமான தொழிலாளியான இவரின் மனைவி திரவியக்கனி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் வழக்கம் போல் குடும்பத்தினருடன் இரவு பாலசுப்பிரமணியன் வீட்டில் தூங்கியிருக்கிறார். காலையில் அவரது வீட்டினருகே பாலசுப்பிரமனியன் தலையில் பலத்த காயங்களோடு பிணமாகக் கிடந்திருக்கிறார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குளம் டி.எஸ்.பி. தெய்வம் மற்றும் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் உள்ளிட்ட போலீசார் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், பால சுப்பிரமணியனை வீட்டுவாசல் அருகே கல்லால் தாக்கி 100 மீட்டர் தூரத்தில் உடலை இழுத்துப் போட்டது தெரிய வந்திருக்கிறது. மேலும் இதில் வேறு நபர் ஈடுபாடு பற்றிய வாய்ப்பின்றிப் போகவே பாலசுப்பிரமணியத்தின் மனைவி திரவியக்கனியிடம் விசாரணை மேற்கொண்டதில் அவரிடமிருந்து முரண்பாடான தகவல் கிடைத்திருக்கிறது. சந்தேகப்பட்ட போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியதில், கணவரைக் கொலை செய்ததை மனைவி திரவியக்கனி ஒப்புக்கொண்டிருக்கிறார்.

 

பின்னர் கைது செய்யப்பட்ட அவர் சம்பவம் குறித்து வாக்குமூலமும் கொடுத்திருக்கிறாராம். பாலசுப்பிரமணியனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும். மேலும் மனைவியைக் கணவன் சந்தேகப்பட்டதாகவும்., இதனால் தம்பதியருக்குள் தகராறு நடந்திருக்கிறது. சம்பவத்தன்று பாலசுப்பிரமணியன் மனைவியை உறவுக்காக அழைக்க அதற்கு உடன்பட மறுத்திருக்கிறாராம். என்னுடன் சந்தோஷமாக இல்லாமல் வேறு யாருடன் இருக்கப் போகிறாய் என்று கேட்டவர் நடு இரவில் மனைவியைத் தாக்கியிருக்கிறார். ஆத்திரமடைந்த மனைவி கல்லால் அவரைத் தாக்கியிருக்கிறார். பின் மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்ததால் பயந்து போன மனைவி, உடலை இழுத்துச் சென்று தெருவோரத்தில் போட்டுவிட்டு யாருக்கும் சந்தேகம் வராதபடி வீட்டிற்குச் சென்றிருக்கிறார்.

 

அதிகாலையில் தனது கணவரை யாரோ அடித்துக் கொன்றதாக அவரது தம்பி சொல்ல, மனைவியும் ஒன்றும் தெரியாதது போல உடலைப் பார்த்துக் கதறியபடி நடித்தது போலீசின் விசாரணையில் தெரிய வர சிக்கிக் கொண்டார் என்கிறார்கள் போலீஸ் தரப்பில். இருப்பினும் இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என அவரிடம் விசாரணை போய்க் கொண்டிருக்கிறதாம். இந்த சம்பவம் கடையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.