Skip to main content

“எங்கூட இல்லாமல் யாரு கூட இருக்கப் போற...” - சந்தேக கணவனை கொன்ற மனைவி

Published on 30/01/2023 | Edited on 30/01/2023

 

 wife who incident her husband

 

தென்காசி மாவட்டத்தின் கடையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். கட்டுமான தொழிலாளியான இவரின் மனைவி திரவியக்கனி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் வழக்கம் போல் குடும்பத்தினருடன் இரவு பாலசுப்பிரமணியன் வீட்டில் தூங்கியிருக்கிறார். காலையில் அவரது வீட்டினருகே பாலசுப்பிரமனியன் தலையில் பலத்த காயங்களோடு பிணமாகக் கிடந்திருக்கிறார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குளம் டி.எஸ்.பி. தெய்வம் மற்றும் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் உள்ளிட்ட போலீசார் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், பால சுப்பிரமணியனை வீட்டுவாசல் அருகே கல்லால் தாக்கி 100 மீட்டர் தூரத்தில் உடலை இழுத்துப் போட்டது தெரிய வந்திருக்கிறது. மேலும் இதில் வேறு நபர் ஈடுபாடு பற்றிய வாய்ப்பின்றிப் போகவே பாலசுப்பிரமணியத்தின் மனைவி திரவியக்கனியிடம் விசாரணை மேற்கொண்டதில் அவரிடமிருந்து முரண்பாடான தகவல் கிடைத்திருக்கிறது. சந்தேகப்பட்ட போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியதில், கணவரைக் கொலை செய்ததை மனைவி திரவியக்கனி ஒப்புக்கொண்டிருக்கிறார்.

 

பின்னர் கைது செய்யப்பட்ட அவர் சம்பவம் குறித்து வாக்குமூலமும் கொடுத்திருக்கிறாராம். பாலசுப்பிரமணியனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும். மேலும் மனைவியைக் கணவன் சந்தேகப்பட்டதாகவும்., இதனால் தம்பதியருக்குள் தகராறு நடந்திருக்கிறது. சம்பவத்தன்று பாலசுப்பிரமணியன் மனைவியை உறவுக்காக அழைக்க அதற்கு உடன்பட மறுத்திருக்கிறாராம். என்னுடன் சந்தோஷமாக இல்லாமல் வேறு யாருடன் இருக்கப் போகிறாய் என்று கேட்டவர் நடு இரவில் மனைவியைத் தாக்கியிருக்கிறார். ஆத்திரமடைந்த மனைவி கல்லால் அவரைத் தாக்கியிருக்கிறார். பின் மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்ததால் பயந்து போன மனைவி, உடலை இழுத்துச் சென்று தெருவோரத்தில் போட்டுவிட்டு யாருக்கும் சந்தேகம் வராதபடி வீட்டிற்குச் சென்றிருக்கிறார்.

 

அதிகாலையில் தனது கணவரை யாரோ அடித்துக் கொன்றதாக அவரது தம்பி சொல்ல, மனைவியும் ஒன்றும் தெரியாதது போல உடலைப் பார்த்துக் கதறியபடி நடித்தது போலீசின் விசாரணையில் தெரிய வர சிக்கிக் கொண்டார் என்கிறார்கள் போலீஸ் தரப்பில். இருப்பினும் இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என அவரிடம் விசாரணை போய்க் கொண்டிருக்கிறதாம். இந்த சம்பவம் கடையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.